![](pmdr0.gif)
உதயணகுமார காவியம் :
பொ. வே. சோமசுந்தரனார் உரையுடன்
utayaNakumAra kAviyam
verses with commentaries
of P.V. cOmacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
உதயணகுமார காவியம் : செய்யுளும்
பொ வே சோமசுந்தரனார் உரையும்
Source:
உதயணகுமார காவியம் :செய்யுளும்
திரு பொ வே சோமசுந்தரனார் அவர்கள் உரையும்
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
1/140, பிரகாசம் சாலை, (சென்னை-1)
2nd edition, 1972
-----------
உள்ளடக்கம்
உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை.
இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன : உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.
உதயணகுமார காவியம் -- செய்யுளும் உரையும்
1. கடவுள் வாழ்த்து
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)
முக்குடை: சந்திராதித்தியம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பன ‘பொன்னுநன்
மணியுமுத்தும் புனைந்தமுக் குடை’ என (சூடா.க) நிகண்டிலும் வருதல் காண்க. பண்ணவர் - சாதுக்கள். நேமீசர் - நேமிநாதர் என்னும் இருபத்திரண்டாந் தீர்த்தங்கரர். (1)
----------
2
----------
3. அவையடக்கம்
இதனோடு,
------------
4. பயன்
இந்நூல் புண்ணிய நூலாகலின் இதனை ஓதுவார்க்கு இனிவரக்கடவ தீவினைகள் வாரா. வரக்கடவ நல்வினையெல்லாம் வந்து செல்வ முண்டாக்கும் என்றவாறு. மாறுறு முன்கருமம் என்றது முன்னரே உயிரைப் பிணித்துள்ள வினைகளை. இவற்றைச் சிறிது சிறிதாக நீக்கும் என்பார் வரிசையின் உதிர்ப்பை ஆக்கும் என்றார். உதிர்ப்பு என்னுந் தத்துவம் கைவரப் பெறுவோர் வீடுபெறுதல் ஒருதலை ஆகலின் அதன் பெருமை பேசலாகா தென்றார்.
இதன்கண் நற்காட்சி எய்துதற்குரிய ஏழு தத்துவங்களில் ஊறு செறிப்பு, உதிர்ப்பு என்னும் மூன்று தத்துவங்கள் கூறப்பட்டன.
ஏழு தத்துவங்கள்: உயி்ர், உயிரில்லது, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு. கட்டு, வீடு என்பன. இவற்றில், ஊறு - மாறுறு கருமம் என்பதனானும், செறிப்பு - செறியப்பண்ணும் என்பதனானும், உதிர்ப்பு - உதிர்ப்பை ஆக்கும் என்பதனானும் பெற்றாம். ஊறாவது - வினைகள் உயிருடன் சேரவரும் வாயில். செறிப்பு - அவ்வினை வருவாயைத் தடுப்பது, உதிர்ப்பு - உயிருடன் முன்னமே சேர்ந்து பிணித்துள்ள வினைகளைச் சிறிது சிறிதாகத் தேய்ப்பது. இவ்வுதிர்ப்பே வீடு பேற்றிற்கு இன்றியமையாக் கருவியாகலின் இதன் தன்மை விளம்புதற்பாலதாமோ என்றார். (4)
----------
உதயணகுமார காவியம்- நூல்
5. நாட்டுச் சிறப்பு
இஞ்சி மூன்று-மூன்று மதில். அவை உதயதரம், பிரீதிதரம், கல்யாணதரம் என்பன. வீரநாதர் - சீவர்த்தமானர் என்னும் 24 ஆம் தீர்த்தங்கரர். புஞ்சம் - தொகுதி. (1)
-------------
6. நாவலந்தீவு
------------
7. வத்தவநாடு
----------
8. கோ நகரம்
இதனோடு, ?இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந் தெல்லை காண வேகலின், மஞ்சுசூழ்ந்து கொண்டணிந்து மாக நீண்ட நாகமும், அஞ்சு நின்னை யென்றலி னாண்டு நின்று நீண்டதன், குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி விட்ட தொத்ததே? எனவரும் சிந்தாமணிச் செய்யுளை (143) ஒப்பு நோக்குக. அமரலோகம் அஞ்சலில் என்க. (4)
-----------
9. இதுவுமது
---------
10. அரசன்
------------
11. கோப்பெருந்தேவி
----------
12.
------------
13. மிருகாபதியை ஒரு பறவை எடுத்துப் போதல்
-----------
14.
--------
15. அரசி கருவுயிர்த்தல்
----------
16
-----------
17. மகவிற்குப் பெயரிடல்
-------------
18. உதயணன் பெற்ற பேறுகள்
---------
19. உதயணன் தெய்வயானையைக் கோடவதியின் உதவியாற் பெறுதல்
-----------
20. தெய்வயானை உதயணன் கனவிற்றோன்றிக் கூறுதல்
--------
21. உதயணன் மாமனாகிய விக்கிரமன் அத்தவப் பள்ளிக்கு வருதல்
-----------
22. விக்கிரமன் உதயணனையும் யூகியையும் கண்டு இவர்கள் யார் என முனிவரை வினாதல்
------------
23. உதயணன் அரசுரிமை பெறுதல்
---------
24. சதானிகன் மிருகாபதியைக் காண்டல்
-----------
25. மிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்
---------------
26
-----------
27. சதானிகன் துறவியாதல்
---------
28. உதயணனுடைய அமைச்சர்கள்
-----------
29. உதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்
-------------
30. தெய்வயானை மறைந்து போதல்
கொடு வம்மின்! என்று கட்டளையிட அச்சேனை நாடெங்கும் பரவிச் சென்று தேடுவதாயிற்று என்க. (26)
-------------
31. கலிவிருத்தம்
(27)
-----------
32.பிரச்சோதன மன்னன்
-------------
33
அப்பொழுதுணர்ந்து கணக்க மாந்தரை நோக்க, அவர் அருகில் வந்து அம்மன்னன் திறை செலுத்தாமையைக் கூறியவுடன் அம்முடிவேந்தன் பெரிதும் சினமெய்தினன;் என்க. (29)
------------
34. பிரச்சோதனன் அமைச்சரை வினாதல்
--------------
35. அமைச்சர் விடை
(இ - ள்.) அதுகேட்ட நல்லமைச்சர் வணங்கி வேந்தர் பெரும! திறைக்கடன் செலுத்தாமல் விட்ட மன்னவனாகிய உதயணகுமரன் திறை செலுத்தாமைக்குரிய காரணங்களும் உள;் அவை அம்மன்னன் போர் நிகழ்தற்குரிய களத்தினில் மறவரெல்லாம் கருதிப் பார்த்தற்கியன்ற பேராண்மையும், பெறுதற்குரிய பொருள் நிரம்புதற்குக் காரணமான பெருமையுடைய கல்விச் சிறப்பும், அஞ்சாமையையுடைய களிற்றினை அடக்கும் ஆற்றலும், குற்றமற்ற கோடவதியென்னும் யாழினாற் சிறப்பாக வாய்த்துள்ள வித்தையும் என்க. (31)
-----------
36
----------
37. பிரச்சோதனன் சினவுரை
------------
38. அமைச்சர் சூழ்ச்சி
-------------
39. அமைச்சர் மாயயானை செய்தல்
-----------
40. அமைச்சர்கள் அந்த யானையைச் செலுத்துதல்
---------------
41. சாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்
-----------------
42. சாலங்காயன் உதயணனைச் சிறைபிடிக்கச் செல்லல்
கோல் முதலிய படைகளும் பிச்சமும் தன்னுடன்கொண்டு விரைந்து சென்றான் என்க. பிச்சம் - ஒருவகைக் குடை. கோல் - முதலியன.
(38)
----------
43. நாற்பெரும் படையின் அளவு
--------------
44
-------------
45. பொய்யானையை வேடர்கள் கண்டு உதயணனுக் கறிவித்தல்
---------
46
(42)
----------
47. உதயணன் மாய யானையைத் தேவயானை என்று கருதி யாழ் மீட்டல்
---------
48. கலி விருத்தம்
--------------
49. பொய்யானை உதயணன்பால் வருதல்
------------
50. போர் நிகழ்ச்சி
-------------
51
-----------
52
---------------
53.
---------------
54.
புரிய அப்பொழுது உதயணமன்னன் தனது வாளினை அந்தச் சாலங்காயன் தலையிலே வைத்தான் என்க. மன்+தன் வாள் எனக் கண்ணழித்துக் கொள்க. (50)
------------
55. உதயணன் சாலங்காயனைக் கொல்லாது விடுதல்
---------------
56. உதயணன் யானை குதிரை தேர்ப்படைகளை அழித்தல்
---------------
57.
-----------
58. நூலாசிரியரின் இரங்கன் மொழிகள்
-----------
59.
-----------------
60. உதயணன் ஓலையெழுதி வயந்தகன்பாற் சேர்த்தல்
-------------
61. பிரச்சோதனன் மகளாகிய வாசவதத்தை கனாக்காண்டல்
----------
62.
-----------
63.
ஆசிரிய விருத்தம்
------------
64. உதயணன் சிறைக் கோட்டம் புகுதலும் வயந்தகன் யூகியைக் காண்டலும்
-------
65. ஓலைகண்டு யூகி துன்புறுதல்
----------
66. யூகியின் கோட்பாடு
---------
67.
------------
68.
-------------
69. யூகியின் சூழ்ச்சி
-------------
70. யூகி பிறரறியாவண்ணம் அவந்தி நாடேகுதலும் பகைமன்னர் நாட்டினைப் பற்றிக் கோடலும்
மறைந்து போதலாலே பகையரசர்கள் அற்ற நோக்கி வந்து உயரிய வத்தவ நாட்டினைக் கைப்பற்றலாயினர், என்று மறைவிருந்த அந்த யூகி அறிந்து கொண்ட பின்னர், யாம் இனிச் சென்று சிறையிருக்கின்ற எம்மன்னன் உதயணகுமரனை அச்சிறையிடத்தே காண்பேம் என்று கருதி அந்த அவந்தி நாட்டை நோக்கிச் சென்றனன் என்க. (66)
----------
71.
------------
72. உஞ்சை நகரத்தின்கண் யூகியின் செயன்முறைகள்
(கலி விருத்தம்)
-------------
73. யூகி மாறுவேடம் புனைந்து நகர்வீதியில் வருதல்
கறிகுவனாதலின் பிறர் மயங்குதற்குக் காரணமான அக்குறிப்பு மொழிகளைப் பேசிக்கொண்டு நிலைபெற்றதொரு மாறுவேடம் பூண்டுகொண்டு உதயணனைக் காணும்பொருட்டு நல்ல அந்நகர வீதியினடுவே வந்தான் என்க. (69)
---------
74. யூகியின் மாறுவேடத்தின் இயல்பு
-------------
75. இதுவுமது
----------------
76. இதுவுமது
-------
77. இதுவுமது
--------------
78. யூகி கூற்று
-----------
79. இதுவுமது
---------
80. இதுவுமது
-----------
(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
81. யூகி சூழ்வினையொன்றால் தன்வரவினை உதயணனுக்குணர்த்திப் போதல்
---------
82. பிரச்சோதனன் மறவர் யூகியை அணுகி ஆராய்ந்துபோதல்
-----------
83. யூகி யானைக்கு வெறியூட்டுதல்
வெறிகொள்ளச் செய்ய முனைந்தான் என்க. அனலும் கதம் எனினுமாம். (79)
-----------
84. இதுவுமது
------------
85. நளகிரியென்னும் அக்களிற்றியானையின் செயல்
பின்னரும் மானக்குணமிக்க நல்லோனாகிய அந்த யூகி அக்களிற்றினது செவியிலே மந்திரமோதியவளவிலே அம்மதக்களிறு தன்னைத் தறியோடு பிணித்திருந்த அறுத்தற்கரிய சங்கிலியை அறுத்துத் துகளாக்கியது என்க. (81)
-----------
86. யானை பாகரைக் கொல்லுதல்
-----------
87.பிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயல் காண்டல்
(83)
----------
88. நளகிரியின் தீச்செயல்கள்
--------
89. இதுவுமது
------------
90. இதுவுமது
--------------
91. உஞ்சை மாந்தர் அலமரல்
---------------
92. அமைச்சர் அக்களிற்றை யடக்குதல் உதயணன் ஒருவனுக்கே முடியும் எனல்
--------
93. மன்னன் மறுத்துக் கூறுதல்
------------
94.அமைச்சர்கள் அதுபழியன்று புகழேயாமெனல்
----------
95. அமைச்சன் பிரச்சோதனன் சீவகன் என்பான் உதயணனைக் கண்டு கூறல்
------------
96.
உயரிய பண்புடைய பிரச்சோதன மன்னன் அரண்மனை புகுந்து அழகிய மயிரின்கண்
எண்ணெய் நீவித் திறம்பட நல்ல நீரிலே ஆடிச் சென்று பட்டாடையுடுத்து மணியணிகலன்
காண்டற்கினிதாக அணிந்து கொண்டு அரச வீதியில் அழகுறச் சென்றனன் என்க. (92)
--------------
97. உதயணன் யாழிசைத்தலும் களிறு அடங்குதலும்
-----------
98. உதயணகுமரன் நளகிரியின் மேலேறுதல்
--------
99. உதயணன் அக்களிறூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்
-----------
100. பிரச்சோதனன் உதயணனுக்குப் பரிசு வழங்குதல்
-------
101. பிரச்சோதனன் உதயணனைத் தழுவிக் கோடல்
---------
102. பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன்கூறி உறவு கொள்ளல்
மக்கட்கு அரிய வித்தைகளை உணர்த்தலாயினான் என்க. பெருவலி, அன்மொழி.
----------
103. உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்
-------------
104. மன்னன் மைந்தர் அரங்கேறுதல்
ஊர்ந்தும் குதிரையேறியும் தேரிலேறியும் முறைமையாகத் தங்கள் வித்தையின் சிறப்புக்களைக் காட்டிப் பின்னர் வாளும் வில்லும் பிறவுமாகிய படைக்கல வித்தைகளும் செய்து காட்டக் கண்டு மகிழ்ந்தனன் என்க. (100)
-----------
105. வாசவதத்தை யாழரங்கேறுதல்
---------------
106. வாசவதத்தை யாழிசையின் மாண்பு
தாமும் அவ்விசை கேட்டு, வியந்து வந்து அவ்வவையினரோடிருந்து மகிழவும் பறவைகள் அவ்வின்னிசையான் மயங்கிப்பசும் பொன்னா லியன்ற அவ்வரங்கின்கண் வீழாநிற்பவும் இசையைக் குறுக்கியும் நீட்டியும் இசையிலக்கண முறைமையாலே பாடியபொழுது மதநீர் துளித்தலொழியாத களிற்றினையுடைய அப்பிரச்சோதன மன்னன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். மகளிரெல்லாம் அவ்வின்னிசையாலே பெரிதும் மயங்குவாராயினர் என்க. (102)
-------------
107. பிரச்சோதனன் உதயணனை வத்தவ நாட்டிற்குப் போக்கத் துணிதல்
------------
108. பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்
--------------
109. யூகி குறத்தி வேடம் புனைந்து குறி சொல்லல்
-----------
110. பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்றீயிடுதல்
---------
111. உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்
----------------
112. இதுவுமது
-------
113. இதுவுமது
----------------
114. பிடி வீழ்ந்திறத்தல்
--------
115. உதயணன் முதலியோர் ஊர் நோக்கி நடந்து செல்லல்
-------------
116. வயந்தகன் அவர்களை வீட்டுப் புட்பகம் போதல்
நல்ல காரியமே என்று கூற வயந்தகனும் விரைந்து புட்பக நகர் நோக்கிச் சென்றான் என்க. (112)
------------
117. வேடர்கள் உதயணனை வளைத்துக் கோடல்
------------
118. உதயணனுடன் வேடர் போர்செய்தல்
-----------
119. வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும், வயந்தகன் வரவும்
----------
120. உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்
முதலாவது உஞ்சைக் காண்டம் முற்றும்.
---------
121. நூலாசிரியர் நுதலிப்புகுதல்
(ஆசிரிய விருத்தம்)
----------
122. உதயணன் வாசவதத்தையை மணம் புணர்தல்
-----------
123. இதுவுமது
-------------
124. உதயணன் கழிபெருங்காமத் தழுந்திக் கடமையை நீத்தல்
------------
125. யூகியின் செயல்
------------
126. இதுவுமது
------------
127. யூகி இடபகன்பால் உதயணனைப் பற்றி வினாதலும் அவன் விடையும்
-----------
128. இதுவுமது
------------
129. இதுவுமது
இவ்வாறு பெரிதும் விரும்பியுள்ள வாசவதத்தையை அவனிடத்தினின்றும் யாதானுமோருபாயத்தாலே பிரித்துவிடின் அவன் இழந்திருக்கின்ற அரசியல் அவனுக்குக் கைகூடிவருவதாம்; இல்லையே லில்லை என்று எண்ணினான் என்க. (9)
-------------
130. யூகியின் செயல்
---------------
131. இதுவுமது
------------
132. சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்
------------
133. உதயணன் செயல்
-------------
134. உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்
---------------
135. உதயணனன் தழைகொணரப் போதல்
------------
136. யூகியின் செயல்
-----
137. சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்
-------------
138. யூகி வாசவதத்தையை வரங் கேட்டல்
------------
139. உதயணன் மீண்டுவந்து வருந்துதல்
----------
140. இதுவுமது
-----------
141. உதயணன் வாசவதத்தையின் அணிகலன்கண்டழுதல்
-----------
142. உதயணன் மனம் நொந்து அழுது புலம்புதல்
----------
143. இதுவுமது
----------
144. இதுவுமது
-----------
145. இதுவுமது
---------------
146. அமைச்சர் தேற்றுதல்
-----
கலிவிருத்தம்
147. யூகி உருமண்ணுவாவிற் குரைத்தல்
------------
148. அமைச்சர்கள் ஆராய்ந்து துணிந்தபடி வயந்தகன்
உதயணனுக்குக் கூறுதல்/
----------------
149. இதுவுமது
-------------
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
150. உதயணகுமரன் நாற்படையும் சூழ மகதநாடு செல்லுதல்
இலாவாண காண்டம் முற்றிற்று.
-------------
151. உதயண குமரன் மீண்டும் வாசவதத்தையை நினைந்து வருந்துதல்
-------------
152. இதுவுமது
---------
153. உதயணன் மகதநாடெய்துதல்
------------
154. உதயணன் முதலியோர் இராசகிரிய நகரத்துப் புறஞ்சேரியிற் றங்குதல்
------
155. வயந்தகன் காகதுண்ட முனிவனுக்குச் சூழ்ச்சி கூறுதல்
------------
156. காகதுண்டகன் உதயணனைக் கண்டு கூறுதல்
----------------
157. பதுமாபதியும் உதயணனும் காட்சியெய்துதல்
-------------
158. உதயணனும் பதுமாபதியும் களவுமணங் கூடுதல்
-------
159. உதயணன் தோழர்க்குக் கூறுதலும் அவருடன்பாடும்
----------------
160. உதயணன் பதுமாபதியுடன் கன்னிமாடம் புகுதல்
--------------
161. உருமண்ணுவா வயந்தகன் முதலியோர்க்குக் கூறுதல்
-------------
162. உருமண்ணுவாவின் செயல்
---------
163. உதயணகுமரன் மகதமன்னனைக் கண்டு கேண்மை கோடல்
-------------
164. சங்க மன்னர்கள் மகதநாட்டின் மேற் படையெடுத்து வருதல்
---------------
165. அம்மன்னர் நாடழித்தல்
-------------
166. உருமண்ணுவாவின் சூழ்வினை
-------------
167. கலிவிருத்தம்
------
168. பகையரசர் ஐயுற்று ஓடுதலும் மீண்டுங் கூடுதலும்
------------
169. இதுவுமது
-------------
170. ஒற்றர் அங்ஙனம் செய்தது உதயண மன்னன் எனலும் உருமண்ணுவா தருசகனைக் கண்டு கூறலும்
---
171. தருசகன் உதயணனை எதிர்சென்று கேண்மை கோடல்
------------
வேறு
172. உதயணன் படையுடன் சென்று பகைவரை வெல்லுதல்
------------
தருசகன் உதயணனுக்குப் பதுமாபதியை மணஞ்செய்து கொடுத்தல்
--------
174. உதயணன் தருசகன் உதவியுடன் தன் பகைமேற் சேறல் இதுமுதல் ஐந்து செய்யுட்கள் ஒரு தொடர்
-----------
175.
------------
176.
------------
177.
--------------
178. பிங்கல கடகர் படைகொடு வருதல்
----------
179. உதயணகுமரன் வருடகாரனுக்குக் கூறுதல்
----------
180. வருடகாரன் துணையரசரைப் பிரித்தலும் ஆருணி போர்தொடங்கலும்
----------
181. வேறு -போர் நிகழ்ச்சி
-------------
182. உதயணன் ஆருணி மன்னனைக் கொன்று வீழ்த்துதல்
-----------
183. உதயணகுமரன் கோசம்பி நகருட் புகுதல்
-----------
(வேறு)
184. உதயணன் அரண்மனை புகுதல்
----------
185. உதயணன் போரில் விழுப்புண் பட்ட மறவர்க்கு ஆவன செய்து பின் திருமுடி சூடி ஆட்சி செலுத்துதல்
-----------
மூன்றாவது மகதகாண்டம் முற்றும்.
(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
186. உதயணகுமரன் திருவோலக்க மண்டபத்தில் வீற்றிருத்தல்
----------------
187. உதயண மன்னன் அளியும் தெறலும்
-----------
188. உதயணன் பத்திராபதி என்னும் பிடிக்கு மாடமும் உருவமும் எடுத்தல்
--------------
189. உதயணன் கோடவதி யென்னும் யாழை மீண்டும் பெறல்
--------
190. பதுமாபதி உதயணனிடம் யாழ் பயில விரும்புதல்
---------------
191. உதயணன் வாசவதத்தையை நினைந்து வருந்தித் துயில்தலும் கனவு காண்டலும்
------------
192. உதயணன் ஒரு முனிவனிடம் சென்று கனவின் பயன் வினாதல்
-------------
193. உதயணன் கனாப்பயன் கேட்டுக் களிகூர்தல்
-------------
194. உருமண்ணுவா சிறைவீடு பெற்றது
-------------
195. உருமண்ணுவா உதயணன்பால் வருதல்
------------
196. யூகி முதலியோர் வாசவதத்தையைக் கோசம்பிக்குக் கொணரல்
------------
197. உதயணன் யூகி முதலியோரை வினவுதல்
-------------
198. யூகி காரணம் கூறுதல்
-----------
199. உதயணன் வாசவதத்தை முதலியோரொடு மகிழ்ந்திருத்தல்
--------------
200. பதுமாபதியின் வேண்டுகோள்
--------------
201. உதயணன் வாசவதத்தை மாளிகைக்கெழுந்தருளலும், அவள் ஊடுதலும்
-------------
202. உதயணன் வாசவதத்தை ஊடலைப் போக்குதல்
--------------
203. உதயணன் வாசவதத்தை யூடல்தீர்த்துக் கூடுதல்
---------
204. இதுவுமது
------------
205. இதுவுமது
--------
206. உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்
---------------
207. உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் ஊர் வழங்குதல்
-------
208. யூகிக்கு ஊர் வழங்குதல்
-----------
209. உதயண குமரன் பிரச்சோதனன் உய்த்த திருமந்திரவோலை பெறல்
------
210. பிரச்சோதனன் ஓலையிற் கண்ட செய்தி
------------
211. இதுவுமது
-----------
212. இதுவுமது
-------------
213. யூகி உஞ்சைக்குப் போதலும் பிரச்சோதனன் வரவேற்றலும்
தன்னெஞ்சத்தே நிலை பெற்ற மகிழ்ச்சி காரணமாக அவ்வமைச்சன் மகிழ்தற்குக் காரணமான முகமன் மொழிகளைக் கூறினன் என்க. (28)
-------------
214. பிரச்சோதனன் முரசறைவித்தல்
(கலிவிருத்தம்)
--------------
215. யூகியை அரசன் பாராட்டல்
--------
216. இதுவுமது
----------
217. இதுவுமது
----------
218. பிரச்சோதன மன்னன் யூகிக்குத் திருமணஞ் செய்வித்தல்
-------------
219. இதுவுமது
---------
220. யூகி வத்தவ நாடு புகுந்து உதயணனைக் காண்டல்
----------
தேவிமார் உதயணனைப் பந்தடிகாண அழைத்தல்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
---------------------
222. உதயணன் பந்தடி காணல்
---------
223. மகளிர் பந்துப் போர் இராசனை
------
224. காஞ்சனமாலை
---------
225. அயிராபதி
--------
226. விச்சுவலேகை
-----------
227. ஆரியை
-------
228. மானனீகை வருதல்
-----------
229. இதுவுமது
----------
230. இதுவுமது
-----------
(கலிப்பா)
231. காஞ்சனமாலை பந்தடித்தல்
----------
232. இதுவுமது
----------
233. மானனீகையை அனைவரும் பாராட்டுதல்
--------
234. மானனீகையின் பந்துகளின் செலவு வகைகள்
-----------
235. பந்தாடுங்காலத்து மானனீகையின் நிலைமை
---------------
236. மானனீகையின்பால் உதயணன் காதல் கோடல்
237. மானனீகை எண்ணாயீரங்கை பந்தடித்து நிறுத்தல்
----------
238. மானனீகை புணர்வும் வாசவதத்தை சினமும்
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
------------
239. மானனீகை மணம்
-------------
240. விரிசிகை மணம்
---------
241. மன்னன் ஆட்சிச் சிறப்பு
நான்காவது வத்தவகாண்டம் முற்றும்
-----------
242. வாசவதத்தை வயிறு வாய்த்தல்
----------
243. வாசவதத்தையின் வயாவிருப்பம் அறிதல்
------------
244. உருமண் ணுவா கூற்று
----------
245. இதுவுமது
------------
246. தேவன் கூற்று
-----------
247. இதுவுமது
-------------
248. இதுவுமது : உதயணன் கூற்று
--------
249. தேவன் மீண்டும் மந்திரம் செவியறிவுறுத்தல்
----------
250. உதயணன் முதலியோர் தேரிலேறி வானத்தே பறந்து போதல்
-----------
251. இதுவுமது
-----------
252. நரவாகனன் பிறப்பு
------
253. உதயணன் முதலியோர் மக்கட்குப் பெயரிடுதல்
-----------
254. நரவாகனன் கலைபயிலல்
--------------
255. நரவாகனன் உலாப்போதல்
-----------
256. நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்
----
257. நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்
--------------
258. மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்
-------
259. மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்
-------------
260. வேகவதி நரவாகனன் சிறப்பினைக்கேட்டு அவனைக் காமுறல்
----------
261. வேகவதி மதனமஞ்சிகை வடிவத்தோடு நரவாகனனைக் காண்டல்
--------------
262. மதனமஞ்சிகையென்று கருதி மன்னன் அவளைக் கூடுதல்br> கலிவிருத்தம்
--------
263. இதுவுமது
----------
264. மன்னவன் வேகவதியை ஐயுற்று வினவுதல்
-------------
265. நரவாகனன் வேகவதியை விரும்புதல்
------
266. மானசவேகன் நரவாகனனையும் வேகவதியையும் பற்றிப்போதல்
-----------
267. மாவசவேகன் நரவாகனனை நிலத்திற் றள்ளிவீடுதல்
------------
268. நரவாகனனைச் சதானிக முனிவன் காண்டல்
------------
269. இதுவுமது
--------------
270. நரவாகனன் சதானிக முனிவனை வினவுதல்
-------------
271. இதுவுமது
------------
272. முனிவன் கூறுதல்
-----------
273. நரவாகனன் இருமுதுகுரவர்க்கும் முனிவன் கூற்றை அறிவித்தல்
------------
274. இதுவுமது
-----------
275. நரவாகனன் வித்தியாதரருலகஞ் செல்லுதல்
--------------
276. நரவாகனனை அப்பொய்கைக் கரையில் ஒரு வித்தியாதரன் காண்டல்
------------
277. நரவாகனன் வித்தியாதரனை வினவுதலும், அவன் விடையும்
“மாண்புடையோய்! கேட்டருளுக! பிறர் எய்துதற்கரிய இந்த வெள்ளிமலைமிசை கண்ணுக்கு அழகாக விளங்குகின்ற கொடிகளையுடைய கந்தருவபுரம் என்னும் நகரமொன்றுளது” என்றான் என்க. (36)
------------
278. இதுவுமது
-------------
279. இதுவுமது
----------------
280. இதுவுமது
-------------
281. இதுவுமது
-------------
282. இதுவுமது
-------------
283. இதுவுமது
------------
284. நரவாகனனை நீலவேகன் எதிர்கொள்ளல்
----------------
---------------
286. அநங்கவிலாசனை சுயம் வரம்
------------
287. அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலை சூட்டுதல்
------------
288. மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்
குறிப்பு:--இவ்விடத்தில் மானசவேகன் நரவாகனனுக்கு அஞ்சி மதன மஞ்சிகையைக் கொணர்ந்து நரவாகனன் பால் விட்டுப் போயினன் என்னும் பொருளுடைய செய்யுள் ஒன்று விடுபட்டிருத்தல் வேண்டு மென்று தோன்றுகின்றது.
-------------
289. நரவாகனன் திருவுலா
-------------
290. நரவாகனன் எய்திய பேறுகள்
-------------
291. இதுவுமது
இந்திரன் நரவாகனனை யுவந்து சக்கரநிதி முதலிய ஒன்பது வகை நிதிகளையும் எண்ணாயிரம் மகளிரையும் வழங்க, அவற்றைத் தேவர்கள் கொணர்ந்து நரவாகனனுக்கு வழங்கி வணங்கினர் என்றவாறு, தோம் - குற்றம், எண்ணாயிரம்: மகளிர்க்கு ஆகுபெயர் மேல்-294 ஆம் செய்யுளில் ‘எண்ணாயிரமான தேவியர்’ எனவருவதூஉ முணர்க. (50)
----------
292. நரவாகனனைச் சக்கரப் படை வந்து வணங்கல்
-----------
293. நரவாகனன் வாகைசூடி வருதல்
-----------
294. நரவாகனன் அரசு வீற்றிருத்தல்
-----------
295. இதுவுமது
------------
296. நரவாகனன் தந்தையைக் காணவருதல்
-------------
297. இதுவுமது
------------
298. நரவாகனன் தந்தைதாயரை வணங்கல்
----------
299. உதயணன் செயல்
----------
300. பதுமாபதியின் மைந்தனாகிய கோமுகனுக்கு முடிசூட்டல்
-----------
301. நரவாகனன் வித்தியாதர ருலகம் போதல்
------------
302. நரவாகனன் வித்தியாதர ருலகம் புகுதல்
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
ஐந்தாவது நரவாகன காண்டம் முற்றும்.
------------
303. உதயணகுமரன் தவம்புரியக் கருதுதல்
----------
304. இதுவுமது
------------
305. உதயணன் தவத்தின் பெருமையை நினைத்தல்
கலிவிருத்தம்
--------
306. இதுவுமது
------------
307. இதுவுமது
--------------
308. இதுவுமது
-----------
309. மகளிர் உதயணன் துறவுபூ ணாவகை மயக்குதல்
---------
310. உதயணன் மீண்டும் காமவின்பத்தே யழுந்துதல்
-----------
311. மதவெறி கொண்ட களிற்றியானையின் செயல்
-----------
312. இதுவுமது
----
313. நகரமாந்தர் செயல்
-------------
314. களிற்றின் செயல்
-------------
315. நகரமாந்தர் அரசனுக்கறிவித்தல்
-------------
316. நகரமாந்தர் செயல்
-----------
317.
318. சாரணர் சார்ந்திருந்த பொழில்
-------------
319. அச்சாரணர் மாண்பு
------------
320. இதுவுமது
மலைத்த லைமிசை வானிற் செல்வரும்
நிலத்தி னால்விர னீங்கிச் செல்வரும்
தலத்தி னன்முழந் தரத்திற் செல்வரும்
பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும்.
(இ - ள்.) இலையுச்சியின்மேலே வானத்தே செல்வதனாலே ‘ஆகாயசாரணர்’் எனப்படுவோரும், நிலத்தினின்றும் நால்விரன் மேலே செல்வதனால் ‘சதுரங்குல சாரணர்’் எனப்படுவோரும், நிலத்தினின்றும் நன்மையுடைய ஒரு முழம் உயரத்தே செல்வதனால் ‘தலசாரணர்’் எனப்படுவோரும், மலைமுழைஞ்சுகளிலே கூடியிருந்து வானத்தே செல்வதனால் ‘சங்கசாரணர’் எனப்படுவோரும் என்க. (18)
-------------
321. இதுவுமது
மலைமு ழைஞ்சுண் மன்னி னான்மறை
உலகெ லாமவ ரொருங்கி டவிடும்
அலம தீரவே வறம ழைபெய்யும்
மலம றுந்தர மாமு னிவரும்.
(இ - ள்.) மலைமுழைஞ்சுகளிலே நிலைபெற்று நைவாரேனும் நான்கு மறைப்பொருளையும் உலகெலாம் வாழும் மாந்தர் மனம் ஒருங்கிக் கேட்குமாறும் அவர்க்கு ஊழ்வினை கூட்டுகின்ற துன்பங்களை அறுக்க அறமாகிய மழை பெய்கின்ற முகில்போல் வாடும் துன்பற்ற மெய்யுணர்வுடைய தகுதியையுடைய முனிவர்களும் என்க.(19)
----------
322. இதுவுமது
பக்க நோன்புடைப் பரம மாமுனி
மிக்க பாணிமீ தடிசின் மேதினி
புக்கு முண்டிடப் போது வார்பகல்
தக்க வர்குணம் சாற்ற ரிதென்றே.
(இ - ள்.) பல பகுதிகளையுடைய நோன்பை மேற்கொண்ட மேலான முனிவராகிய இவர்கள் மிகவும் தமது கைகளிலேயே உலகின்கண் இல்லறத்தாரிடம் சென்று பிச்சைபுக் குண்ணற்பொருட்டு ஒரொருகாற் பகற்பொழுதிலே போவர், தகுதியுடைய இவர்தம் மாண்பினைக் கூறிக் காட்டல் அரிதாம் என்க. (20)
-----------
323. தருமவீரர் அறங் கூறல்
தரும வீரரென் றவருட் டலைவன்பால்
வெருவருந் துன்ப விலங்கும் வாழ்க்கையை
மருவி யோதவே வந்த யாவரும்
திருமொ ழியினைத் திறத்திற் கேட்டனர்.
(இ - ள்.) அச்சாரணர் குழுவினுட் டலைவராகிய தருமவீரர் என்பவர் அஞ்சத்தகுந்த பிறவித் துயரந் தீர்தற்குரிய மெய்யாய வாழ்க்கையை எடுத்து ஓதாநிற்ப அத்தலைவன்பால் ஆங்குவந்தவர் எய்தி அவர் கூறுகின்ற அழகிய அறமொழிகளைக் கேட்பாராயினர் என்க. வந்த யாவரும் தலைவன்பால் மருவிக் கேட்டனர் என்று கூட்டுக. (21)
------------
324. யானையின் செயல்
வருந்த சைநசை வானிற் புள்ளுகள்
இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப்
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும்
விருந்த வையுண விட்ட தியானையே.
(இ - ள்.) ஊனுண்ணும் விருப்பத்தோடு வானிற் பறந்து வரும் பறவைகள் ஆரவாரித்து மேலும் கீழுமாய்த் தன்னைச் சூழ்ந்து வாராநிற்பவும் பருந்துகள் முன்னும் பின்னும் பரவிப் பறந்து வரவும் அவையெல்லாம் விருந்துண்டு மகிழும்படியும் அக்களிற்றியானை உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊன்களை வழங்கியது என்க. (22)
---------
325. அந்த யானை சாரணர் அறவுரை கேட்டுத் தன் பழம் பிறப்பினை யுணர்தல்
கூற்றெ ழுங்கரி கொதித்தே ழுந்ததால்
ஆற்ற லம்முனி யறவு ரையுற
ஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடை
மாற்ற ரும்பவ மறித்து ணர்ந்ததே.
(இ - ள்.) மறவிபோன்றெழுந்து உயிரினங்களை அழிக்கும் அக்களிற்றியானை அவ்வறங்கேட்கும் குழுவினரைக் கண்டு மேலும் சினந்து அக் கூட்டத்தை நோக்கி வந்துழி அங்குத் தவவாற்றல்மிக்க அத் தருமவீரர் திருமாய்மலர்ந்தருளிய அறவுரை ஆகூழுண்மையின் அக்களிற்றியானையின் செவியிற் புகுதலாலே அதனை ஏற்று அம் முனிவனை வணங்கி மாற்றுதற் கரிய தனது பிறப்பின் வரலாற்றினை மீண்டும் உணர்வதாயிற்று என்க. (23)
-------------
326. களிறு தன் செயலுக்கு வருந்துதல்
குருதியாறிடக் கொன்ற தீவினை
வெருவு துக்கமும் விலங்கி னுய்த்திடும்
அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும்
பெருந்து யரெனப் பேது றுக்குமே.
(இ - ள்.) ஊழ்வினை காரணமாகத் தருமவீரருடைய அறவுரைகளைச் செவியேற்ற அக்களிறு தமது அறியாமையாலே குருதி ஆறாகப் பெருகி ஓடும்படி தான் உயிரினங்களைக் கொன்றமையாலே தனக்கெய்திய தீவினையானது அஞ்சத்தகுந்த துன்பத்தையும் மேலும் விலங்குப பிறப்பினையும் கொடுக்குமே என்றும், பெருந்துயருக்குக் காரணமான அரிய நரகத்தினும் அழுத்திவிடுமே என்றும் எண்ணிப் பெரிதும் வருந்தியது என்க. (24)
-------------
327. களிற்றியானை மெய்யுணர்வெய்தி அமைதியுறுதல்
327. நெஞ்சு நொந்தழு நெடுங்க ணீருகும்
அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக்
குஞ்ச ரம்மினிக் கோன கருன்னி
இஞ்சி வாய்தலி னெய்தி நின்றதே.
(இ - ள்.) இவ்வாறு தன் பிறப்புணர்ந்த அக் களிற்றியானை தான் செய்த தீவினையை எண்ணி உளம் நொந்து கண்ணீர் சொரிந்து தன்னுள் அழுது அஞ்சாநிற்கும;் இங்ஙனம் அக் களிற்றியானைக்கு அப்பொழுது நன்ஞானம் தோன்றுதலாலே தன் மன்னனாகிய உதயணகுமரனுடைய அரண்மனையை நினைத்து மீண்டு சென்று அவ்வரண்மனை மதில் மாடவாயிலிலே அமைதியாக நின்றது என்க. (25)
------------
328. உதயணகுமரன் அக்களிற்றைக் காண வருதல்
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
------
329. யூகி உதயணனை அக்களிற்றின் மிசை ஏறுக வென்னல்
-----------
330. களிற்றியானை உதயணனை முனிவர்பாற் கொண்டு போதல்
----------------
331. உதயணகுமரன் அத்துறவோர்பால் அறங்கேட்டல்
------------
332. முனிவர் கூறும் அறவுரைகள்
------------
333. இதுவுமது
-----------
334. இதுவுமது
-----------
335. இதுவுமது
கலிவிருத்தம்
-----
336. உதயணன் அம்முனிவன்பால் களிற்றின் வரலாறு வினவுதலும் முனிவன் கூறலும்
-----------
337. இதுவுமது
----------------
338. இதுவுமது
-----
339. இதுவுமது
--------------
340. முனிவர் உரைகேட்ட முடிமன்னன் செயல்
------------------
341. இதுவுமது
-----------
342. உதயணன் முனிவரை மற்றொன்று வினவுதல்
-------------
343. முனிவர் கூற்று
---------------
344. இதுவுமது
345. இதுவுமது
------------
346. இதுவுமது
-----------
347. இதுவுமது
------------
348. இதுவுமது
----------
349. உதயணன் வருந்திக் கூறுதல்
--------------
350.உதயணன் செயல்
-----
351. இதுவுமது
----------
352. உதயணன் அரண்மனை புகுதல்
---------------
353. உதயணகுமரன் இறைவழிபாடு செய்தல்
ஆசிரிய விருத்தம்
-----------
354. உதயணன் செயல்
-------------
355. நரவாகனன் வருதலும் உதயணன் அவனுக்குக் கூறலும்
-----------
356. கோமகனுக்கு முடி சூட்டுதல்
--------------
357. உதயணன் மனைவிமார்க்குக் கூறுதலும், அவர் கூறுதலும்
-------------
358. தேவிமாரும் அமைச்சரும் அரசனுடன் செல்லுதல்
-------------
359. உதயணன் முனிவரைத் தவந்தர வேண்டல்
------------
360. உதயணன் முதலியோர் தவக்கோலங் கோடல்
-----------
361. உதயணன் முதலியோர் தவநிலை
------------
362. இதுவுமது
-----------
363. இதுவுமது
----------
364. இதுவுமது
--------------
365. உதயணன் கேவலஞான மெய்துதல்
-----------
366. தேவிமாரும் அமைச்சரும் நோன்பு செய்து தேவராதல்
-------------
367. தேவிமாரும் அமைச்சரும் தேவலோகத்தின் புற்றிருத்தல்
ஆகச் செய்யுள் 367
உதயணகுமார காவியமும் உரையும் முற்றும்
---------------
உதயணகுமாராவியம் : காண்டங்களின் & செய்யுட்டொகை
அறுசீர்கழிநெடிலடிாசிரிய விருத்தம்
உஞ்சைநற் காண்டந் தன்னி லுயர்கவி நூற்றீ ரெட்டு
மிஞ்சவே யிலாவா ணத்தின் வீறுயர் முப்ப தாகும்
எஞ்சலின் மகத காண்ட மெழிலுடை முப்பத் தஞ்சாம்
அஞ்சுட னைம்பத் தொன்றா மரியவத் தவத்திலன்றே
நறுமலர் மாலை மார்ப னரவாக காண்டந் தன்னில்
அறுபது மொன்றுமாகு மாகிய துறவுக் காண்டம்
அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந்
திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகு மன்றே
நூற்றீரெட்டு நூற்றுப்பதினாறு முதலில் உள்ள கடவுள் வாழ்த்து அவையடக்கம் பயன்கூறும் நான்கு செய்யுளையும் நீக்கி உஞ்சைக் காண்டச் செய்யுட் டொகை காண்க
--------------
உதயணகுமார காவியம் :செய்யுளும்
திரு பொ வே சோமசுந்தரனார் அவர்கள் உரையும்
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
1/140, பிரகாசம் சாலை, (சென்னை-1)
2nd edition, 1972
-----------
உள்ளடக்கம்
உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை.
இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன : உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.
-
0. கடவுள் வாழ்த்து/ அவையடக்கம் (1-4)
1. உஞ்சைக் காண்டம் (5- 120)
2. இலாவாண காண்டம் (121- 150)
3. மகத காண்டம் (151 -185)
4. வத்தவ காண்டம் (186 - 241)
5. நரவாகன காண்டம் (242 -302)
6. துறவுக் காண்டம் (303 -367 )
உதயணகுமார காவியம் -- செய்யுளும் உரையும்
முதலாவது -உஞ்சைக் காண்டம்
1. கடவுள் வாழ்த்து
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)
-
மணியுடன் கனக முத்த மலிந்தமுக் குடையி லங்க
அணிமலர்ப் பிண்டி யின்கீ ழமர்ந்தநே மீசர் பாதம்
பணிபுபின் வாணி பாதம் பண்ணவர் தாள்க ளுக்கெம்
இணைகரஞ் சிரத்திற் கூப்பி யியல்புறத் தொழுது மன்றே.
முக்குடை: சந்திராதித்தியம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பன ‘பொன்னுநன்
மணியுமுத்தும் புனைந்தமுக் குடை’ என (சூடா.க) நிகண்டிலும் வருதல் காண்க. பண்ணவர் - சாதுக்கள். நேமீசர் - நேமிநாதர் என்னும் இருபத்திரண்டாந் தீர்த்தங்கரர். (1)
----------
2
-
2. பொன்னெயில் நடுவ ணேங்கும் பூநிறை யசோக நீழல்
இன்னிய லாலயத்து ளேந்தரி யாச னத்தின்
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கா னுதயணன் கதைவிரிப்பாம்.
----------
3. அவையடக்கம்
-
மணிபொதி கிழியு மிக்க மணியுட னிருந்த போழ்தில்
மணிபொதி கிழிய தன்னை மணியுட னன்கு வைப்பார்
துணிவினிற் புன்சொ லேனுந் தூயநற் பொருள்பொ திந்தால்
அணியெனக் கொள்வார் நாமு மகத்தினி லிரங்கல் செல்லாம்.
இதனோடு,
-
நாவலந் தீவிற் கிட்டா நவமணி பொதிந்து வைத்த
மேவருங் கிழியு மந்த மணியுடன் விரும்பு மாபோற்
பாவரும் குற்ற மாமென் கவிதையின் பழுதும் பாரா
தியாவருங் கொள்வாரீசன் பெயரதி லிருக்கை யாலே?
------------
4. பயன்
-
ஊறுந்தீ வினைவாய் தன்னை யுற்றுடன் செறியப் பண்ணும்
கூறுநல் விதிபு ணர்ந்து குறையின்றிச் செல்வ மாமுன்
மாறுறு கருமந் தன்னை வரிசையி னுதிர்ப்பை யாக்கும்
வீறுறு முதிர்ப்பின் றன்மை விளம்புதற் பால தாமோ.
இந்நூல் புண்ணிய நூலாகலின் இதனை ஓதுவார்க்கு இனிவரக்கடவ தீவினைகள் வாரா. வரக்கடவ நல்வினையெல்லாம் வந்து செல்வ முண்டாக்கும் என்றவாறு. மாறுறு முன்கருமம் என்றது முன்னரே உயிரைப் பிணித்துள்ள வினைகளை. இவற்றைச் சிறிது சிறிதாக நீக்கும் என்பார் வரிசையின் உதிர்ப்பை ஆக்கும் என்றார். உதிர்ப்பு என்னுந் தத்துவம் கைவரப் பெறுவோர் வீடுபெறுதல் ஒருதலை ஆகலின் அதன் பெருமை பேசலாகா தென்றார்.
இதன்கண் நற்காட்சி எய்துதற்குரிய ஏழு தத்துவங்களில் ஊறு செறிப்பு, உதிர்ப்பு என்னும் மூன்று தத்துவங்கள் கூறப்பட்டன.
ஏழு தத்துவங்கள்: உயி்ர், உயிரில்லது, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு. கட்டு, வீடு என்பன. இவற்றில், ஊறு - மாறுறு கருமம் என்பதனானும், செறிப்பு - செறியப்பண்ணும் என்பதனானும், உதிர்ப்பு - உதிர்ப்பை ஆக்கும் என்பதனானும் பெற்றாம். ஊறாவது - வினைகள் உயிருடன் சேரவரும் வாயில். செறிப்பு - அவ்வினை வருவாயைத் தடுப்பது, உதிர்ப்பு - உயிருடன் முன்னமே சேர்ந்து பிணித்துள்ள வினைகளைச் சிறிது சிறிதாகத் தேய்ப்பது. இவ்வுதிர்ப்பே வீடு பேற்றிற்கு இன்றியமையாக் கருவியாகலின் இதன் தன்மை விளம்புதற்பாலதாமோ என்றார். (4)
----------
5. நாட்டுச் சிறப்பு
-
இஞ்சிமூன் றுடைய கோமா னெழில்வீர நாத னிந்தப்
புஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம் பொற்புநல் லறநன் மாரி
விஞ்சவே சொரியுங் காலம் வெண்மதிக் குடைக்கீழ் வாழும்
எஞ்சலில் காட்சி மன்ன னிருக்கைநா டுரைத்து மன்றே.
இஞ்சி மூன்று-மூன்று மதில். அவை உதயதரம், பிரீதிதரம், கல்யாணதரம் என்பன. வீரநாதர் - சீவர்த்தமானர் என்னும் 24 ஆம் தீர்த்தங்கரர். புஞ்சம் - தொகுதி. (1)
-------------
6. நாவலந்தீவு
-
பூவுநற் றளிருஞ் செற்றிப் பொழின்மிகச் சூழ்ந்தி லங்கும்
நாவலா மரத்தி னாலே நாமமாய்த் துலங்கி நின்று
தீவுநற் கடல்க டாம மொன்றிற்கொன் றிரட்டி சூழ்ந்த
நாவலந் தீவு நந்தி னன்மணி போன்ற தன்றே.
------------
7. வத்தவநாடு
-
வேதிகை சிலைவ ளைத்து வேதண்ட நாணே றிட்டுப்
போதவும் வீக்கி னாற்போற் பொற்புடைப் பரதந் தன்னில்
ஓதிய தரும கண்டத் தோங்கிய காவு நின்று
வாதத்தாற் சுகந்தம் வீசும் வத்தவ னாட தாமே.
----------
8. கோ நகரம்
-
இஞ்சிமிக் கெழுந்தே யோங்கி யிலங்கிய வமர லோகம்
எஞ்சலி லெல்லை காணா வெழில்பெற நிற்ற னோக்கி
அஞ்சலில் வருக வென்றே யணிபெற விலங்கி நீண்ட
குஞ்சிநன் கொடிக்க ரத்தாற் கூவியிட் டழைக்கு மன்றே.
இதனோடு, ?இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந் தெல்லை காண வேகலின், மஞ்சுசூழ்ந்து கொண்டணிந்து மாக நீண்ட நாகமும், அஞ்சு நின்னை யென்றலி னாண்டு நின்று நீண்டதன், குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி விட்ட தொத்ததே? எனவரும் சிந்தாமணிச் செய்யுளை (143) ஒப்பு நோக்குக. அமரலோகம் அஞ்சலில் என்க. (4)
-----------
9. இதுவுமது
-
முகிறவழ் மாட மீதின் முத்தணி மாலை நான்றே
இகலுறு மமளி யின்மே லெழின்மங்கை மைந்தர் தாமும்
பகலிர வின்றிப் போகம் பண்பினாற் றுய்த்தி ருப்பார்
நகரிகௌ சாம்பி யென்னு நாமமார்ந் திலங்கு மன்றே.
---------
10. அரசன்
-
ஊனுமிழ்ந் திலங்கும் வேலா னுன்னத முகிலெ ழுந்து
வானுமிழ் வாரி யன்ன வண்கையன் வண்ட ரற்றும்
தேனுமி ழலங்கற் றோளான் செல்வத்திற் குபேர னன்னான்
தானுமிழ் கிரண மார்பன் சதானிகனரச னாமே.
------------
11. கோப்பெருந்தேவி
-
மன்னவ னுள்ளத் துள்ளாண் மாமணி மயிலஞ் சாயல்
அன்னமென் னடைவேற் கண்ணா ளருந்ததி யனைய ஙங்கை
பொன்னணி சுணங்கு பூத்த புணர்முலை யமிர்த மன்னாள்
மின்னு நுண் ணிடையா ணாம மிகாவதி யென்று மிக்காள்.
----------
12.
-
கற்புடைத் திருவி னங்கை காரிகை தன்வ யிற்றிற்
சற்புரு டொருவன் வந்து சார்ந்தவ தரித்து மி்க்க
நற்புடைத் திங்க ளொன்பா னன்கமைந் திருக்கு மோர்நாட்
பொற்புடை மஞ்ச மீதிற் பொலிவுட னிருந்த போழ்தில்.
------------
13. மிருகாபதியை ஒரு பறவை எடுத்துப் போதல்
-
செந்துகின் மூடிக் கொண்டு திருநிலா முற்றந் தன்னில்
அந்தமாய்த் துயில்கொள் கின்ற வாயிழை தன்னைக் கண்டே
அந்தரத் தோடு கின்ற வண்டபே ரண்டப் புள்ளொன்
றந்தசை யென்று பற்றி யன்றுவான் போயிற் றன்றே.
-----------
14.
-
மற்றவ டந்தை தானு மாமுனி யாகி நிற்கும்
சற்கிரி விபுல மன்னுஞ் சாரலவ் வனத்திற் சென்று
நற்றவ னருகில் வைப்ப நற்றுயில் விட்டெ ழுந்தாள்
பற்றுயி ருண்ணாப் புள்ளும் பறந்துவான் போயிற் றன்றே.
--------
15. அரசி கருவுயிர்த்தல்
-
நிறைமதி முகநன் மங்கை நிரம்பிய கெர்ப்ப மாதல்
பொறைவயி னோய்மீக் கூரப் பொருவில்வான் கோள்க ளெல்லாம்
முறையினல் வழியை நோக்க மொய்ம்பனத் தினத்திற் றோன்ற
அறையலை கடலிற் சங்க மாணிமுத் தீன்ற தொத்தாள்.
----------
16
-
பொருகயற் கண்ணி னாடான் போந்ததை யறிந்த ழுங்கித்
திருமணி கிடந்த தென்னச் செழுமகன் கிடப்பக் கண்டு
பெருகிய காத லாலே பெருந்துயர் தீர்ந்தி ருப்ப
மருவுநற் றாதை யான மாமுனி கண்டு வந்தான்.
-----------
17. மகவிற்குப் பெயரிடல்
-
தவமுனி கொண்டு சென்று தாபதப் பள்ளி சேர்த்தி
அவணினி தோம்ப வப்பா லருக்கன துதய காலத்
துவமையின் றுதித்தா னாம முதயண னாக வென்றார்
இவணமத் தாயுஞ் சேயு மிருடிபா லிருந்தா ரன்றே.
-------------
18. உதயணன் பெற்ற பேறுகள்
-
பிரமசுந் தரயோ கிக்குப் பிறந்தவன் யூகி யோடும்
இருவரும் வளர்ந்தே யின்பக் கலைக்கட னீந்திக் கானக்
கரிணமும் புள்ளு மற்றுங் கண்டடி வீழுங் கீதப்
புரந்தரன் கொடுத்த யாழும் பொறைமுனி யருளிற் பெற்றான்.
---------
19. உதயணன் தெய்வயானையைக் கோடவதியின் உதவியாற் பெறுதல்
-
மைவரை மருங்கி னின்ற மலையென விலங்கு கின்ற
தெய்வநல் லியானை கண்டு சென்றுதன் வீணை பாடப்
பையெனக் களிறுங் கேட்டுப் பணிந்தடி யிறைஞ்சி நின்று
கையது கொடுப்ப வேறிக் காளையும் பள்ளி சேர்ந்தான்.
-----------
20. தெய்வயானை உதயணன் கனவிற்றோன்றிக் கூறுதல்
-
நன்றிருட் கனவி னாக நயமறிந் தினிது ரைக்கு
பன்னிடும் பாகன் வந்து பற்றியே யேறி னாலும்
இன்றைநாண் முதலா நீநா னின்றியே முன்னுண் டாலும்
அன்றுன்பா னில்லே னென்றே யக்கரி யுரைப்பக் கேட்டான்.
--------
21. உதயணன் மாமனாகிய விக்கிரமன் அத்தவப் பள்ளிக்கு வருதல்
-
செல்லுமக் காலந் தன்னிற் செறிதவன் புதல்வ னான
வெல்களிற் றியானை வேந்தன் விக்கிரன் றனக்கு மக்கள்
இல்லையென் றெவ்வங் கூர்ந்தே யினிமையின் வந்து நல்ல
சொல்லருண் முனிவன் பாதந் தொழுதுநன் கிருந்தா னன்றே.
-----------
22. விக்கிரமன் உதயணனையும் யூகியையும் கண்டு இவர்கள் யார் என முனிவரை வினாதல்
-
புரவல னினிய ராமிப் புதல்வர்க ளார்கொ லென்ன
வரமுனி யருளக் கேட்டு மகிழ்ந்துதன் னாய மெல்லாம்
சிரசணி முடியுஞ் சூட்டிச் செல்வற்குக் கொடுத்துப் போக்கி
விரவிய தவத்த னாக வேண்டுவ தெண்ண மென்றான்.
------------
23. உதயணன் அரசுரிமை பெறுதல்
-
முனியொடு தங்கை தன்னை முயன் றிரந் தெய்தி நாகம்
தனையன வெங்க யத்திற் றனையனை யேற்றிப் போய்த்தன்
மனனிறை நாட்டை யந்த மருகனுக் கீந்து போந்து
முனிவனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றா னன்றே.
---------
24. சதானிகன் மிருகாபதியைக் காண்டல்
-
இளமையை இகந்து மிக்க வினியநற் குமர னாகி
வளமையிற் செங்கோ றன்னை வண்மையி னடத்தி னானாங்
கிளமயி லனைய தேவிக் கிரங்கிய சதானி கன்றான்
உளமலி கொள்கை யான்ற வொருதவற் கண்டு ரைத்தான்.
-----------
25. மிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்
-
தேவியின் வரவு நல்ல திருமகன் செலவுங் கேட்டு
மாவலன் மனம கிழ்ந்து வந்தூர்புக் கிருக்கு நாளில்
தேவியும் வந்து கூடிச் சிறந்தநற் புதல்வர் தம்மைத்
தேவிளங் குமரர் போலச் செவ்வியிற் பயந்தா ளன்றே.
---------------
26
-
பிங்கல கடக ரென்று பேரினி திட்டு மன்னன்
தங்கிய காத லாலே தரணியாண் டினிது செல்லக்
குங்கும மணிந்த மார்பக் குமரனும் யூகி யும்போய்
அங்குள தேச மெல்லா மடிப்படுத் தினிதி ருந்தார்.
-----------
27. சதானிகன் துறவியாதல்
-
உதயண குமரன் றன்னை யுற்றுட னழைத்துப் பூமிப்
பதமுனக் காக வென்று பார்த்திபன் கொடுத்துப் போகிக்
கதமுறு கவலை நீங்கும் காட்சிநற் றவத்த னாகி
இதமுறு யோகந் தன்னி லெழில் பெறநின்றா னன்றே.
---------
28. உதயணனுடைய அமைச்சர்கள்
-
மணிமுடி கவித்த போழ்தின் வத்தவர்க் கிறைவ னானான்
அணியுநாற் படையுஞ் சூழ்ந்த அமைச்சரு நால்வர் நாமம்
தணிவில்சீர் யூகி யோடு சாருரு மண்ணு வாவும்
துணைவயந் தகனுந் தொல்சீர் விடபக னென்ப வாமே.
-----------
29. உதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்
-
அரசனுக் கினிய ராகி யமைச்சிய னடத்திச் செற்றே
வருபகை பலவுந் தேய வரச்செங்கோ லுய்க்குங் காலை
அரியநா டகங்கள் கண்டே யரசனு முளமா ழாந்து
கரிணத்தை மறந்துவிட்டுக் காதலி னடிசி லுண்டான்.
-------------
30. தெய்வயானை மறைந்து போதல்
-
மன்னிய தெய்வ யானை மாயமாய் மறைந்து போக
மன்னனு மனந்த ளர்ந்து மணியிழந் தரவு போலத்
துன்னிய சோக மேவித் துயரெய்தித் தேடுகென்றான்
பன்னருஞ் சேனை சென்று பாரெங்குந் தேடிற்றன்றே.
கொடு வம்மின்! என்று கட்டளையிட அச்சேனை நாடெங்கும் பரவிச் சென்று தேடுவதாயிற்று என்க. (26)
-------------
31. கலிவிருத்தம்
-
சிந்து கங்கைநீர் சேர்ந்து வளம்படும்
அந்த மாகு மவந்திநன் னாட்டினுள்
இந்து சூடிய விஞ்சி வளநகர்
உந்து மாளிகை யுஞ்சையெனும்பதி.
(27)
-----------
32.பிரச்சோதன மன்னன்
-
உரைப்ப ரும்ப டைப்பிரச் சோதனன்
நிரைத்த மன்னர் நிதிமிக் களப்பவே
தரித்த நேமி யுருட்டித் தரணியாண்
டிரைத்த மாகளிற் றேறொடு மன்னுவான்.
-------------
33
-
பொருவின் மன்னன் பொன்றிறை கேட்புழித்
திருவ மன்னர் திறைதெரி யோலையுள்
ஒரும கன்புள்ளி யிட்ட தறிந்திலன்
மருவிக் கூறலு மன்னன் வெகுண்டனன்.
அப்பொழுதுணர்ந்து கணக்க மாந்தரை நோக்க, அவர் அருகில் வந்து அம்மன்னன் திறை செலுத்தாமையைக் கூறியவுடன் அம்முடிவேந்தன் பெரிதும் சினமெய்தினன;் என்க. (29)
------------
34. பிரச்சோதனன் அமைச்சரை வினாதல்
-
தாம ரைக்கண் டழலெழ நோக்கியத்
தீமை செய்த திரைக்கடன் மன்னனை
நாம றந்திட நன்கு மறைத்ததென்
ஆம மைச்சரென் றண்ணல் வினவினன்.
--------------
35. அமைச்சர் விடை
-
உறுக ளத்தினி லுன்னிய வாண்மையும்
பெறுபொ ருள்செறி பீடுடைக் கல்வியும்
தறுகண் வேழந் தகைக்குறு பெற்றியும்
மறுவில் வீணையின் வாய்த்தநல் விஞ்சையும்.
(இ - ள்.) அதுகேட்ட நல்லமைச்சர் வணங்கி வேந்தர் பெரும! திறைக்கடன் செலுத்தாமல் விட்ட மன்னவனாகிய உதயணகுமரன் திறை செலுத்தாமைக்குரிய காரணங்களும் உள;் அவை அம்மன்னன் போர் நிகழ்தற்குரிய களத்தினில் மறவரெல்லாம் கருதிப் பார்த்தற்கியன்ற பேராண்மையும், பெறுதற்குரிய பொருள் நிரம்புதற்குக் காரணமான பெருமையுடைய கல்விச் சிறப்பும், அஞ்சாமையையுடைய களிற்றினை அடக்கும் ஆற்றலும், குற்றமற்ற கோடவதியென்னும் யாழினாற் சிறப்பாக வாய்த்துள்ள வித்தையும் என்க. (31)
-----------
36
-
வளமை யின்வந்த மன்னிய செல்வமும்
இளமை யின்ப மெழில்கல நற்குலம்
உளவ னாதலி னுற்ற கடனென
அளவு நீதி யமைச்ச ருரைத்தனர்.
----------
37. பிரச்சோதனன் சினவுரை
-
வேந்தன் கேட்டு வெகுண்டுரை செய்தனன்
போந்த வற்பற்றிப் போதரு வீரெனக்
சேர்ந்த மைச்சர்கள் செய்பொரு ளென்னென்று
மாந்தி மற்றவர் மற்றொன்று செய்கின்றார்.
------------
38. அமைச்சர் சூழ்ச்சி
-
ஊன மாற்றர்மேல் யூகிபோர் போனதும்
ஆனை போக வரச னிரக்கமும்
கான யானை காட்டிப் பிடிப்பதும்
மான வேலவர் மந்திரித் தொன்றினர்.
-------------
39. அமைச்சர் மாயயானை செய்தல்
-
அரக்கி னும்மெழு காக்கிய நூலினும்
மரத்தி னுங்கிழி மாவின் மயிரினும்
விரித்த தோலினும் வேண்டிய வற்றினும்
தரித்த யானையைத் தாமி யற்றினார்.
-----------
40. அமைச்சர்கள் அந்த யானையைச் செலுத்துதல்
-
பொறிய மைகரிப் பொங்கு முதரத்தில்
உறையு மாந்தரோர் தொண்ணூற் றறுவரை
மறையு மாயுதம் வைத்தத னோருடல்
நெறிகண் டூர்ந்தனர் நீல மலையென.
---------------
41. சாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்
-
கார்மு ழக்கிற் களிறொலி செய்யவே
போர்மிக் கானையைப் பொற்புடை மன்னன்முன்
ஊர்ந்து காட்டினா னுற்ற வமைச்சருட்
சார்ந்த மந்திரி சாலங்கா யென்பவன்.
-----------------
42. சாலங்காயன் உதயணனைச் சிறைபிடிக்கச் செல்லல்
-
சாலங் காயநீ சார்ந்து தருகென
ஞாலங் காக்கு நரபதி செப்பலும்
வேலுங் கொண்டுநல் வேந்தர்கள் வெண்குடைக்
கோலும் பிச்சமுங் கொண்டு பறந்தனன்.
கோல் முதலிய படைகளும் பிச்சமும் தன்னுடன்கொண்டு விரைந்து சென்றான் என்க. பிச்சம் - ஒருவகைக் குடை. கோல் - முதலியன.
(38)
----------
43. நாற்பெரும் படையின் அளவு
-
ஈரெண் ணாயிர மெண்வரை யானையும்
ஈரெண் ணாயிர மீடில் புரவியும்
ஈரெண் ணாயிர மின்பணித் தேருடன்
ஈரெண் ணாயிர விற்படை யாளரே.
--------------
44
-
இத்த னையு மியல்புடன் கூடியே
மெத்தெ னாவரு கென்று விடுத்தனன்
ஒத்த நற்பொறி யோங்கிய யானையும்
வத்த வன்றன் வனத்திடை வந்ததே.
-------------
45. பொய்யானையை வேடர்கள் கண்டு உதயணனுக் கறிவித்தல்
-
அவ்வ னத்தினி லான பிடிகளும்
கவ்வு கைத்தழைக் காரிடி யானைதன்
மவ்வ லம்மத வண்டெழ வீசலும்
அவ்வ னச்சர ரன்புடன் கண்டனர்.
---------
46
-
எம்மி றையது வேழ மெனவெண்ணித்
தம்மி லோடி யுதையற் குரைத்தலும்
கொம்மை வண்மணிக் கோலக் கலினமாச்
செம்ம லுஞ்சிறந் தேறி நடந்தனன்.
(42)
----------
47. உதயணன் மாய யானையைத் தேவயானை என்று கருதி யாழ் மீட்டல்
-
(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
புள்ளிடை தடுப்பத் தீய பொய்க்குறி செய்யக் கண்டும்
வள்ளலு நடப்பா னாக வயந்தகன் விலக்கப் போந்து
கள்ளவிழ் மலர்க்கா னத்துக் கள்ளநல் லியானை கண்டே
உள்ளமெய் மொழிக டம்மா லுணர்ந்தவ னினிய னானான்.
---------
48. கலி விருத்தம்
-
நக்க ணத்தை நயந்துட னோக்கிலன்
அக்க கணத்தி லகமகிழ் வெய்தித்தன்
மிக்க வீணையை மெய்ந்நரம் பார்த்துடன்
தக்க ராகத்திற் றான்மிக வாசித்தான்.
--------------
49. பொய்யானை உதயணன்பால் வருதல்
-
பொறியின் வேழத்தின் பொங்கு செவியுற
உறும னத்துட னூர்ந்துமுன் னேவர
மறையு மாந்தர்கைம் மாவை யழித்திடப்
பொறிக ழன்றது போர்ப்படை யானதே.
------------
50. போர் நிகழ்ச்சி
-
செறுநர் செய்தது சித்திர மாமென
முறுவல் கொண்ட முகத்தின னாகத்தன்
னுறுவ யந்தக னுற்றவைந் நூற்றுவர்
மறுவில் வீரியர் வந்துடன் கூடினர்.
-------------
51
-
கரந்தி ருந்த களிற்றினுட் சேனையும்
பரந்து முன்வந்த பாங்கில் வளைத்தபின்
விரிந்து வத்தவன் வெகுண்டு நூறினான்
முரிந்து சேனை முனையின் மடிந்ததே.
-----------
52
-
சாலங் காயனுஞ் சார்ந்து வெகுண்டிட
நாலு மாப்படை வந்துநாற் றிக்கிலும்
மேலெ ழுந்து மிகவும் வளைத்தன
காலன் போன்மனன் கண்கள் சிவந்தன.
---------------
53.
-
புல்வாய்க் கூட்டத்துப் புக்க புலியெனக்
கொல்வா ளோச்சியே கூற்றம் விருந்துண
வில்வா டம்முடன் வீர ரழிந்திட
வல்வாள் வத்தவன் வாட்கிரை யிட்டனன்.
---------------
54.
-
கொன்ற போரிற் குருதியா றோடவு
நின்ற மாந்தர்க ணீங்கிவிட் டோடவும்
கன்றி யுட்சாலங் காயனு மேல்வர
மன்றன் வாளவன் சென்னியில் வைத்தனன்.
புரிய அப்பொழுது உதயணமன்னன் தனது வாளினை அந்தச் சாலங்காயன் தலையிலே வைத்தான் என்க. மன்+தன் வாள் எனக் கண்ணழித்துக் கொள்க. (50)
------------
55. உதயணன் சாலங்காயனைக் கொல்லாது விடுதல்
-
மந்திரீகளை மன்னர் வதைசெயார்
புந்தி மிக்கோ ருரைபொருட் டேறித்தன்
செந்தி வாளை யழுத்திலன் செல்வனும்
அந்த மைச்சனை யன்பின் விடுத்தனன்.
---------------
56. உதயணன் யானை குதிரை தேர்ப்படைகளை அழித்தல்
-
திரளு டைக்கரி சேர்ந்து வளைத்தலும்
வரைகள் வீழ்வென வாரணம் வீழவும்
நிரைம ணித்தேர் நிலத்திற் புரளவும்
புரவி கள்பொங்கிப் பூமியில் வீழவும்.
---------------
57.
-
வெஞ்சி னம்மனன் வேறணி நூறலும்
குஞ்ச ரத்தின்கோட் டின்வா ளொடியவத்
தஞ்ச மின்றிய தாருடை வேந்தனை
வெஞ்சொன் மாந்தர் வெகுண்டுடன் பற்றினார்.
-----------
58. நூலாசிரியரின் இரங்கன் மொழிகள்
-
நங்கை மார்குழ னாண்மலர் சூட்டுங்கை
திங்கள் போலத் திலத மெழுதுங்கை
பொங்கு கொங்கையிற் குங்குமம் பூசுங்கை
பங்க யத்தடிப் பாடகஞ் சூட்டுங்கை.
-----------
59.
-
கீத வீணைசெங் கெந்த மளையுங்கை
ஈதன் மேவி யிரவலர்க் காற்றுங்கை
ஏத மில்குணத் தென்முடி மன்னன்கை
போத வெண்டுகி லாற்புறத் தார்த்தனர்.
-----------------
60. உதயணன் ஓலையெழுதி வயந்தகன்பாற் சேர்த்தல்
-
சிலந்தி நூலிற் செறித்தநற் சிங்கம்போல்
அலங்கல் வேலினா னன்புடை யூகிக்கே
இலங்க வோலை யெழுதி வயந்தகன்
நலங்கொள் கையி னவின்று கொடுத்தனன்.
-------------
61. பிரச்சோதனன் மகளாகிய வாசவதத்தை கனாக்காண்டல்
-
காசி றேர்மிசைக் காவ லுடன்செலப்
பேச ரும்பெரு மைப்பிரச் சோதனன்
ஆசை யின்மக ளாடகப் பாவைபோன்ம்
வாச வதத்தை வண்மைக் கனவிடை.
----------
62.
-
பொங்கி ளங்கதிர் போந்த தமளியில்
கொங்கை யைத் தழீஇக் கொண்டு டன்செல
நங்கை கண்டுநற் றாதைக் குரைத்தனள்
அங்கந் நூலின றிந்தவர்க் கேட்டனன்.
-----------
63.
ஆசிரிய விருத்தம்
-
இவண்மு லைக்கி யைந்தநல் லெழின்ம ணம்ம கன்வந்தே
துவளி டையி ளமுலை தோய்ந்து கொண்டு போமென
அவள்க னவு ரைப்பக்கேட் டண்ண லும்ம கிழ்ந்தபின்
திவளு மாலைத் தேர்மிசைச் செம்மல் வந்த டைந்தனன்.
------------
64. உதயணன் சிறைக் கோட்டம் புகுதலும் வயந்தகன் யூகியைக் காண்டலும்
-
மன்ன னைமி கவும்நொந்து மாந கரி ரங்கவும்
துன்னி வெஞ்சி றைமனையிற் றொல்வி னைது ரப்பவும்
இன்ன நற் படியிருப்ப வியல்வ யந்த கனுந்தான்
சென்று யூகி தன்னிடைத் திருமு கத்தைக் காட்டினான்.
-------
65. ஓலைகண்டு யூகி துன்புறுதல்
-
அண்ணல் கோயி லெங்கணு மரற்றி னும்பு லம்பினும்
கண்ணி னீர ருவிகள் கால லைத்தொ ழுகவும்
அண்ண லோலை வந்தசெய்தி மான யூகி கேட்டுடன்
புண்ணில் வேலெ றிந்தெனப் பொற்ப ழிந்து வீழ்ந்தனன்.
----------
66. யூகியின் கோட்பாடு
-
தேறி னனெ ழுந்திருந்து தீயர் கள்ள யானையை
மாறு தரக் காட்டியெம் மன்ன னைப்பி டித்தனர்
வீறு தர வந்நகரை வெங்க யத்த ழித்துப்பின்
கூறு மன்ம களுடன் கொற்ற வனை மீட்குவம்.
---------
67.
-
மீள்கு வம்யா ருமென் றெணி வெகுண்டு போர்க்க ளத்தினில்
வாண்மு னைக டந்தவர்க்கு வஞ்ச னைசெய் வோமென
நீள்வி ழிநன் மாதரோடு நின்ற சுற்றத் தோர்களைக்
கோள் களைந்து புட்பகத்திற் கொண்டு வந்து வைத்தனன்.
------------
68.
-
உருமண் ணுவா வினுட னிடப கன்ச யந்தியும்
திருநி றைந்த புட்பகமுஞ் சேர்ந்தி னிதி ருக்கவென்
பெரும கன்க ணிகை மைந்தர் பிங்க லக டகரை
அரசு நாட்டி யாள்கவென்றே யன்பு டன்கொ டுத்தனன்.
-------------
69. யூகியின் சூழ்ச்சி
-
மன்ன வற்கி ரங்கியூகி மரித்த னனென் வார்த்தையைப்
பன்னி யெங்க ணும்முறை பரப்பி வைய கந்தன்னில்
அன்ன தன தொப்புமை யமைந் ததோர்ச வந்தனை
உன்னி யூகி கான்விறகி லொள்ளெரிப்ப டுத்தனன்.
-------------
70. யூகி பிறரறியாவண்ணம் அவந்தி நாடேகுதலும் பகைமன்னர் நாட்டினைப் பற்றிக் கோடலும்
-
தன்ன கர்பு லம்பவெங்குந் தன்னை யுங்க ரத்தலின்
உன்னி வந்து மாற்றரச ரோங்கு நாடு பற்றினர்
என்ற றிந்து யூகியு மினிச்சி றையின் மன்னனைச்
சென்ற வட்காண் டுமென்று தேய முன்னிச் சென்றனன்.
மறைந்து போதலாலே பகையரசர்கள் அற்ற நோக்கி வந்து உயரிய வத்தவ நாட்டினைக் கைப்பற்றலாயினர், என்று மறைவிருந்த அந்த யூகி அறிந்து கொண்ட பின்னர், யாம் இனிச் சென்று சிறையிருக்கின்ற எம்மன்னன் உதயணகுமரனை அச்சிறையிடத்தே காண்பேம் என்று கருதி அந்த அவந்தி நாட்டை நோக்கிச் சென்றனன் என்க. (66)
----------
71.
-
துன்ன ருநற் கானமோடு தொன்ம லையிற் சாரலும்
செந்நெல் கள்வி ளைவயற் செழும்பு னன திகளும்
மன்னு நாடுந் தான்கடந்து மாகொ டிநி றைந்திலங்கு
நன்ன கருஞ் சேனையி னன்க மைச்சன் சென்றனன்.
------------
72. உஞ்சை நகரத்தின்கண் யூகியின் செயன்முறைகள்
(கலி விருத்தம்)
-
ஒலிகட லன்ன வோசையுஞ் சேனைதன்
புலிமுக வாயிற் பொற்புடைத் திலங்கும்
மலிகுடிப் பாக்க மதின் மறைந்திருக்க
வலியதன் சேனை வைத்தன னன்றே.
-------------
73. யூகி மாறுவேடம் புனைந்து நகர்வீதியில் வருதல்
-
இன்னவை கேட்கி னின்னவை தருகென
மன்னவ னறியு மருளுரை பயிற்றி
மன்னிய வேடம் வகுத்துடன் கொண்டு
நன்னகர் வீதி நடுவினில் வந்தான்.
கறிகுவனாதலின் பிறர் மயங்குதற்குக் காரணமான அக்குறிப்பு மொழிகளைப் பேசிக்கொண்டு நிலைபெற்றதொரு மாறுவேடம் பூண்டுகொண்டு உதயணனைக் காணும்பொருட்டு நல்ல அந்நகர வீதியினடுவே வந்தான் என்க. (69)
---------
74. யூகியின் மாறுவேடத்தின் இயல்பு
-
இருள்படு குஞ்சி யியல்படத் தூற்றி
மருள்செய மாலை வகுத்துடன் சுற்றி
உருநிறச் சுண்ண முடலினிற் பூசிப்
பொருணலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி.
-------------
75. இதுவுமது
-
செம்பொற் பட்டஞ் சேர்த்தி நுதலில்
அம்பொற் சாந்த மணிந்த மார்பன்
செம்பொற் கச்சைச் சேர்த்தின னரையில்
அம்படக்கீறி யணிந்த வுடையான்.
----------------
76. இதுவுமது
-
கோதையுத் தரியங் கொண்ட கோலத்தன்
காதிற் குழையினன் காலிற் சதங்கையன்
ஊதுங் குழலின னுலரிய வுடுக்கையன்
போதச் சிரசிற் பொருநீர்க் கலசன்
-------
77. இதுவுமது
-
கொடியணி மூதூர்க் கோலநல் வீதி
நடுவட் டோன்றி நாடக மாடிப்
படுமிசைக் கரணம் பாங்கிற் றாண்டி
இடியென முழங்கி யினிதினின் வந்தான்.
--------------
78. யூகி கூற்று
-
இந்திர லோகம்விட் டிந்திரன் வந்தனன்
அந்தரத் திருந்தியா னன்பினின் வந்தேன்
இந்திர னெனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத்
தந்திரக் குமக்குத் தானிறை யாமென.
-----------
79. இதுவுமது
-
புற்றினி லுறையும் பொறிவரி யைந்தலைப்
பற்றரு நாகம் பற்றிவந் தினிதா
உற்றவிந் நகரத் துட்சிறை வைத்தார்
அற்றதை யெங்கு மறியக் காட்டினார்.
---------
80. இதுவுமது
-
மருளுந் தெருளும் வரம்பில பயிற்றித்
திரளுறு செனங்கள் திறவதிற் சூழப்
பெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே
அருஞ்சிறைப் பள்ளி யருகினிற் சேர்ந்தான்.
-----------
(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
81. யூகி சூழ்வினையொன்றால் தன்வரவினை உதயணனுக்குணர்த்திப் போதல்
-
கிளைத்தலை யிருவர் கற்ற கிளர்நரப் பிசையுங் கீதம்
தளைச்சிறை மன்னன் கேட்பத் தான்மகிழ் குழலினூத
உளத்தியல் பாட்டைக் கேட்டு யூகியா மென மகிழ்ந்து
களைந்தனன் கவலை யெல்லாங் காவலற் குணர்த்திப் போந்தான்.
---------
82. பிரச்சோதனன் மறவர் யூகியை அணுகி ஆராய்ந்துபோதல்
-
பலகொடி வாயிற் செல்லப் பார்மன்னன் சேனை வந்து
நலமுறு வடிவு நோக்க நாகத்தின் கோடு பாய்ந்த
கலனணி மார்வ டுவ்வைக் கஞ்சுகத் துகிலின் மூடத்
தலைமுத லடியீ றாகத் தரத்தினாற் கண்டு போந்தார்.
-----------
83. யூகி யானைக்கு வெறியூட்டுதல்
-
பித்தனற் பேய னென்று பெருமகற் குரைப்பக் கேட்டு
வெற்றிநற் சேனை மற்றும் வெஞ்சிறை காக்க வென்றான்
மற்றினி யூகி போந்து மலிகுடி பாக்கஞ் சேர்ந்தே
அற்றைநா ளிரவில் யானை யனல்கதம் படுக்க லுற்றான்.
வெறிகொள்ளச் செய்ய முனைந்தான் என்க. அனலும் கதம் எனினுமாம். (79)
-----------
84. இதுவுமது
-
வாளொடு கைவில் லேந்தி வயந்தகன் றன்னோ டெண்ணித்
தோளன தோழன் கூடத் தூபத்துக் கேற்ற வத்தும்
வேளையீ தென்று கொண்டு விரகினாற் கயிறு பற்றித்
தாளொத்த கொம்மை மீதிற் றரத்தினா லிழிந்தா னன்றே.
------------
85. நளகிரியென்னும் அக்களிற்றியானையின் செயல்
-
ஆனைதன் னிலைகண் டெய்தி யகிலிடும் புகையு மூட்டிச்
சேனைமன் னகர ழித்துச் சிறைவீடுன் கடனே யொன்று
மானநல் யூகி யானை செவியின்மந் திரத்தைச் செப்ப
யானைதன் மதக்கம் பத்தி லருந்தளை யுதறிற் றன்றே.
பின்னரும் மானக்குணமிக்க நல்லோனாகிய அந்த யூகி அக்களிற்றினது செவியிலே மந்திரமோதியவளவிலே அம்மதக்களிறு தன்னைத் தறியோடு பிணித்திருந்த அறுத்தற்கரிய சங்கிலியை அறுத்துத் துகளாக்கியது என்க. (81)
-----------
86. யானை பாகரைக் கொல்லுதல்
-
நீங்கிட மிதுவென் றெண்ணி நிலைமதி லேறிப் போகத்
தூங்கிரு டன்னி லானை சுழன் றலைந் தோடப் பாகர்
பாங்கினால் வளைப்பப் பொங்கிப் படுமுகின் முழக்க மென்ன
ஆங்கது பிடுங்கிக் கையா லவரைக்கொன் றிட்டதன்றே.
-----------
87.பிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயல் காண்டல்
-
வேழமும் மதங்கொண் டோட வேந்தன்கேட் டினிதெ ழுந்து
வேழநன் வேட்டங் காண வெம்முலை மாத ரோடும்
ஆழிநல் லிறைவன் றானு மணிமிகு மாட மேறிச்
சூழநன் மாதர் நிற்பத் துளக்கின்றி நோக்கி னானே.
(83)
----------
88. நளகிரியின் தீச்செயல்கள்
-
கூடமா ளிகைக ளெல்லாங் கோட்டினாற் குத்திச் செம்பொன்
மாடமு மதிலு மற்று மறித்தஃதி டித்துச் செல்ல
ஆடவர் கூடி யோடி யயில்குந்தந் தண்ட மேந்தி
நாடி நற்கையாற் றட்டி நாற்றிசை சூழ்ந்து நின்றார்.
--------
89. இதுவுமது
-
கூற்றுரு வெய்தி யோடிக் கோட்டிடைக் குடர்க ளாடக்
காற்றென முழக்கி வேழங் கண்டமாந் தரைதத்ன் கையால்
நாற்பத்தெண் பேரைக் கொன்று நடுவுறப் பிளந்திட் டோடி
மாற்றருங் கோட்டை வாயின் மதிற்புறம் போந்த தன்றே.
------------
90. இதுவுமது
-
அறுநூற்றின் மீதி லைம்ப தானநற் சேரி தானும்
உறுநூற்றி லேழை மாற வுள்ளநாற் பாடி யோடும்
நறுமலர்க் கந்தம் வீசு நன்குள காவு மற்றும்
பெறுமத யானை கோட்டாற் பெருநக ரழித்த தம்மா.
--------------
91. உஞ்சை மாந்தர் அலமரல்
-
பாடுநன் மகளி ரெல்லாம் பாட்டொழிந் தரற்றி யோட
ஆடுநன் மாதர் தாமு மாடல்விட் டலந்து செல்லக்
கூடுநன் மங்கை மைந்தர் குலைந்தவ ரேகிச்செம்பொன்
மாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோ டாங்கே.
---------------
92. அமைச்சர் அக்களிற்றை யடக்குதல் உதயணன் ஒருவனுக்கே முடியும் எனல்
-
மத்துறு கடலின் மிக்கு மறுகிய நகரத் தாரும்
வற்றிநல் வேந்த னோடு வினவினா ரமைச்ச ரெண்ணி
இத்தின நகரம் பட்ட விடரது விலக்க னல்ல
வத்தவன் கைய தென்ன வகுத்துரை கேட்ட மன்னன்.
--------
93. மன்னன் மறுத்துக் கூறுதல்
-
போரினி னிற்க லாற்றாம் பொய்யினிற் றந்த மைந்தன்
சீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்த தன்றிப்
பேரிடிக் கரிமுன் விட்டாற் பெரும்பழி யாகு மென்று
தாருடை வேந்தன் சொல்லத் தரத்தினா லமைச்சர் சொல்வார்.
------------
94.அமைச்சர்கள் அதுபழியன்று புகழேயாமெனல்
-
இந்திர னானை தானு மிவன்கையா ழிசைக்கு மீறா
திந்திரன் வேழ முங்கேட் டேழடி செல்லு மற்றிக்
கந்திறு கைம்மா விக்கோன் கைவீணை கடவா தென்ன
மந்திரத் தவர்சொற் கேட்டு மன்னனப் படிச்செய் கின்றான்.
----------
95. அமைச்சன் பிரச்சோதனன் சீவகன் என்பான் உதயணனைக் கண்டு கூறல்
-
சீவகன் வத்த வற்குச் செவ்விதிற் செப்பு கின்றான்
தேவ விந் நகரிடுக் கண் டீர்க்கைநின் கடன தாகும்
போவதுன் றேசத் தென்றல் புரவலன் கடன தாகும்
பூவல னுரைத்தா னென்னப் புகழ்ந்தவன் சிறை விடுத்தான்.
------------
96.
-
உருவுள சிவிகை யேறி யுயர்மன்னன் மனைபு குந்து
திருமயி ரெண்ணெ யிட்டுத் திறத்தினன் னீரு மாடி
மருவிநன் பட்டு டுத்து மணிக்கல னினிது தாங்கித்
தெருவிடைத் திகழப் புக்கான் றிருநகர் மகிழ் வன்றே.
உயரிய பண்புடைய பிரச்சோதன மன்னன் அரண்மனை புகுந்து அழகிய மயிரின்கண்
எண்ணெய் நீவித் திறம்பட நல்ல நீரிலே ஆடிச் சென்று பட்டாடையுடுத்து மணியணிகலன்
காண்டற்கினிதாக அணிந்து கொண்டு அரச வீதியில் அழகுறச் சென்றனன் என்க. (92)
--------------
97. உதயணன் யாழிசைத்தலும் களிறு அடங்குதலும்
-
பருந்துபின் றொடர யானை பறவைகண் மற்றுஞ் சூழப்
பெருந்தெரு நடுவுட் டோன்றப் பீடுடைக் குமரன் றானும்
திருவலித் தடக்கை வீணை சீருடன் பாட லோடும்
மருவலிக் களிறுங் கேட்டு வந்தடி பணிந்த தம்மா.
-----------
98. உதயணகுமரன் நளகிரியின் மேலேறுதல்
-
பிரிந்தநற் புதல்வர் வந்து பெற்றதந் தந்தை பாதம்
பரிந்தநற் காத லாலே பணிந்திடு மாறு போலே
இருந்துதற் பணிந்த யானை யெழின்மருப் படிவைத் தேறிப்
பெருந்தகை யேவிக் கோட்டு பெருங்கையாற் றோட்டி கொண்டான்.
--------
99. உதயணன் அக்களிறூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்
-
வைத்தநன் மணியும் யாழும் வரிக்கயி றதுவு நீட்ட
வெற்றிநல் வேந்தன் வாங்கி வீக்கிமிக் கார்த்துக் கொண்டே
உற்றநல் வீதி தோறு மூர்ந்துநற் சாரி வட்டம்
பற்றிநன் கோட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான்.
-----------
100. பிரச்சோதனன் உதயணனுக்குப் பரிசு வழங்குதல்
-
பிடிப்புப்பொன் விலைமட்டில்லாப் பெருவலி யாரந் தன்னை
முடிப்புவி யரச னீய மொய்ம்பனு மணிந்து கொண்டு
கொடிப்புலி முகத்து வாயிற் கோட்டையுட் கொண்டு வந்தான்
இடிக்குரற் சீய மொப்ப விலங்கிய குமரன் றானே.
-------
101. பிரச்சோதனன் உதயணனைத் தழுவிக் கோடல்
-
சால்கவென் றிறைவன் செப்பத் தன்னுடைக் கையி னோச்சிக்
கால்களின் விரலி னெற்றி கனக்கநன் கூன்றி நின்று
மால்கரி கால் கொடுப்ப மன்னனு மகிழ்ந்து போந்து
வேல்கவின் வேந்தன் காண வியந்துடன் தழுவிக் கொண்டான்.
---------
102. பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன்கூறி உறவு கொள்ளல்
-
மருமக னீயே யென்று மன்னவ னினிமை கூறி
வருமுறை நயந்து கொண்டு மகிழ்ந்துட னிருந்த போழ்தில்
திருமகள் கனவு கூறிச் செல்வநீ கற்பி யென்னப்
பெருவலி யுரைப்பக் கேட்டுப் பெருமக னுணர்த்த லானான்.
மக்கட்கு அரிய வித்தைகளை உணர்த்தலாயினான் என்க. பெருவலி, அன்மொழி.
----------
103. உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்
-
வேந்தன்றன் மக்கட் கெல்லாம் வேன்முதல் பயிற்று வித்தும்
பூந்துகில் செறிம ருங்குற் பொருகயற் கண்ணி வேய்த்தோள்
வாய்ந்தவா சவதத் தைக்கு வருவித்தும் வீணை தன்னைச்
சேர்ந்தவ ணிகரி லின்பிற் செல்வனு மகிழ்வுற் றானே.
-------------
104. மன்னன் மைந்தர் அரங்கேறுதல்
-
உரையினி லரிய னாய வுதயண குமர னோர்நாள்
அரசிளங் குமரர் வித்தை யண்ணனீ காண்க வென்ன
வரைநிகர் யானை யூர்ந்து மாவுடன் றேரி லேறி
வரிசையிற் காட்டி வாள்வில் வகையுடன் விளக்கக் கண்டான்.
ஊர்ந்தும் குதிரையேறியும் தேரிலேறியும் முறைமையாகத் தங்கள் வித்தையின் சிறப்புக்களைக் காட்டிப் பின்னர் வாளும் வில்லும் பிறவுமாகிய படைக்கல வித்தைகளும் செய்து காட்டக் கண்டு மகிழ்ந்தனன் என்க. (100)
-----------
105. வாசவதத்தை யாழரங்கேறுதல்
-
வாசவ தத்தை வந்து மன்னனை யிறைஞ்ச நல்யாழ்
பேசவை தளரக் கேட்டுப் பெருமக னினிய னாகி
ஆசிலா வித்தை யெல்லா மாயிழை கொண்டா ளென்றே
ஏசவன் சிறைசெய் குற்ற மெண்ணுறேல் பெருக்க வென்றாள்.
---------------
106. வாசவதத்தை யாழிசையின் மாண்பு
-
விசும்பியல் குமரர் தாமும் வியந்துட னிருப்பப் புல்லும்
பசும்பொனி னிலத்தில் வீழப் பாவையர் மயக்க முற்றார்
வசம்படக் குறுக்கி நீட்டி வரிசையிற் பாட லோடும்
அசும்பறாக் கடாத்து வேழத் தரசனு மகிழ்ந்தா னன்றே.
தாமும் அவ்விசை கேட்டு, வியந்து வந்து அவ்வவையினரோடிருந்து மகிழவும் பறவைகள் அவ்வின்னிசையான் மயங்கிப்பசும் பொன்னா லியன்ற அவ்வரங்கின்கண் வீழாநிற்பவும் இசையைக் குறுக்கியும் நீட்டியும் இசையிலக்கண முறைமையாலே பாடியபொழுது மதநீர் துளித்தலொழியாத களிற்றினையுடைய அப்பிரச்சோதன மன்னன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். மகளிரெல்லாம் அவ்வின்னிசையாலே பெரிதும் மயங்குவாராயினர் என்க. (102)
-------------
107. பிரச்சோதனன் உதயணனை வத்தவ நாட்டிற்குப் போக்கத் துணிதல்
-
வத்தவன் கையைப் பற்றி மன்னவ னினிது கூறி
வத்தவ னோலை தன்னுள் வளமையிற் புள்ளி யிட்டும்
வத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன
வத்தவநாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார்.
------------
108. பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்
-
ஓரிரண் டாயி ரங்க ளோடைதாழ் மத்த யானை
ஈரிரண் டாயி ரங்க ளெழின்மணிப் பொன்னின் றேரும்
போரியல் புரவி மானம் பொருவிலை யாயி ரம்மும்
வீரர்க ளிலக்கம் பேரும் வீறுநற் குமரற் கீந்தான்.
--------------
109. யூகி குறத்தி வேடம் புனைந்து குறி சொல்லல்
-
யூகியும் வஞ்சந் தன்னை யுற்றுச்சூள் வழாமை நோக்கி
வாகுடன் குறத்தி வேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம்
நாகத்தி னகர ழிந்த நடுக்கங்க டீர வெண்ணிப்
போகநன் னீரி லாடப் புரத்தினி லினிது ரைத்தான்.
-----------
110. பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்றீயிடுதல்
-
மன்னவன் றன்னோ டெண்ணி மாநகர் திரண்டு சென்று
துன்னிய நீர்க்க யத்திற் றொல்புரப் புறத்தி லாட
நன்னெறி வத்த வன்றான் னன்பிடி யேறி நிற்ப
உன்னிய யூகி மிக்க வூரிற்றீ யிடுவித் தானே.
---------
111. உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்
-
பயந்துதீக் கண்டு சேனை பார்த்திபன் றன்னோ டேக
வயந்தகன் வந்து ரைப்ப வத்தவ குமரன் றானும்
நயந்துகோன் மகளை மிக்க நன்பிடி யேற்றத் தோழி
கயந்தனை விட்டு வந்த காஞ்சனை யேறி னாளே.
----------------
112. இதுவுமது
-
வயந்தகன் வீணை கொண்டு வன்பிடி யேறிப் பின்னைச்
செயந்தரக் கரிணி காதிற் செல்வன்மந் திரத்தைச் செப்ப
வியந்துபஞ் சவனந் தாண்ட வேயொடு பற்ற வீணை
வயந்தகன் கூற மன்னன் மாப்பிடி நிற்க வென்றான்.
-------
113. இதுவுமது
-
நலமிகு புகழார் மன்ன நாலிரு நூற்று வில்லு
நிலமிகக் கடந்த தென்ன நீர்மையிற் றந்ததெய்வம்
நலமிகத் தருமின் றென்ன பண்ணுகை நம்மா லென்னக்
குலமிகு குமரன் செல்லக் குஞ்சர மசைந்த தன்றே.
----------------
114. பிடி வீழ்ந்திறத்தல்
-
அசைந்தநற் பிடியைக் கண்டே யசலித மனத்த ராகி
இசைந்தவரிழிந்த பின்னை யிருநில மீதில் வீழத்
தசைந்தகை யுதிரம் பாயச் சாலமந் திரமங் காதில்
இசைந்தவர் சொல்லக் கேட்டே யின்புறத் தேவா யிற்றே.
--------
115. உதயணன் முதலியோர் ஊர் நோக்கி நடந்து செல்லல்
-
உவளகத் திறங்கிச் சென்றே யூர்நிலத் தருகு செல்லப்
பவளக்கொப் புளங்கள் பாவை பஞ்சிமெல் லடியிற் றோன்றத்
தவளைக்கிண் கிணிகண் மிக்க தரத்தினாற் பேச லின்றித்
துவளிடை யருகின் மேவுந் தோழிதோள் பற்றிச் செல்வாள்.
-------------
116. வயந்தகன் அவர்களை வீட்டுப் புட்பகம் போதல்
-
பாவைதன் வருத்தங் கண்டு பார்த்திபன் பாங்கி னோங்கும்
பூவைவண் டரற்றுங் காவுட் பூம்பொய்கை கண்டி ருப்ப
வாவுநாற் படையுங் கொண்டு வயந்தகன் வருவே னென்றான்
போவதே பொருளூர்க் கென்று புரவல னுரைப்பப் போந்தான்.
நல்ல காரியமே என்று கூற வயந்தகனும் விரைந்து புட்பக நகர் நோக்கிச் சென்றான் என்க. (112)
------------
117. வேடர்கள் உதயணனை வளைத்துக் கோடல்
-
சூரியன் குடபாற் சென்று குடவரை சொருகக் கண்டு
நாரியைத் தோழி கூட நன்மையிற் றுயில்க வென்று
வீரிய னிரவு தன்னில் விழித்துட னிருந்த போழ்து
சூரிய னுதயஞ் செய்யத் தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார்.
------------
118. உதயணனுடன் வேடர் போர்செய்தல்
-
வந்தவ ரம்பு மாரி வள்ளன்மேற் றூவத் தானும்
தந்தனு மேவிச் சாராத் தரத்தினால் விலக்கிப் பின்னும்
வெந்திறல் வேடர் வின்னாண் வெந் நுனைப் பகழி வீழ
நந்திய சிலைவ ளைத்து நன்பிறை யம்பி னெய்தான்.
-----------
119. வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும், வயந்தகன் வரவும்
-
செய்வகை யின்றி வேடர் தீவனங் கொளுத்த மன்னன்
உய்வகை யுங்க ளுக்கின் றுறுபொரு ளீவ னென்ன
ஐவகை யடிசில் கொண்டே யானநாற் படையுஞ் சூழ
மெய்வகை வயந்த கன்றான் வீறமைந் தினிதின் வந்தான்.
----------
120. உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்
-
அன்புறு மடிசி லுண்டே யற்றைநாளங்கி ருந்தார்
இன்புறு மற்றை நாளி னெழிற்களிற் றரசனேற
நன்புறச் சிவிகை யேற நங்கைநாற் படையுஞ் சூழப்
பண்புறு சயந்தி புக்குப் பார்த்திப னினிதி ருந்தான்.
முதலாவது உஞ்சைக் காண்டம் முற்றும்.
---------
இரண்டாவது - இலாவாண காண்டம்
121. நூலாசிரியர் நுதலிப்புகுதல்
(ஆசிரிய விருத்தம்)
-
உஞ்சைநகர் விட்டகன் றுதயணகு மாரனும்
தஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின்
என்செய்தன னென்றிடி னியம்புதும் மறியவே
கொஞ்சுபைங் கிளிமொழிதன் கூடலை விரும்பினான்.
----------
122. உதயணன் வாசவதத்தையை மணம் புணர்தல்
-
இலங்கிழைநன் மாதரை யினிமைவேள்வித் தன்மையால்
நலங்கொளப்பு ணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல்
புலங்களின்மி குத்தபோகம் பொற்புடன் னுகர்ந்தனன்
அலங்கலணி வேலினா னன்புமிகக் கூரினான்.
-----------
123. இதுவுமது
-
கைம்மிகுகா மங்கரை காண்கிலன் னழுந்தலில்
ஐம்மிகும் கணைமத னம்புமீக் குளிப்பவும்
பைம்மிகும்பொ னல்குலாள் படாமுலை புணையென
மைம்மிகுங் களி ற்றரசன் மாரன்கட னீந்துவான்.
-------------
124. உதயணன் கழிபெருங்காமத் தழுந்திக் கடமையை நீத்தல்
-
இழந்ததன் னிலத்தையும் மெளிமையுந் நினைத்திலன்
கழிந்தறமு மெய்ம்மறந்து கங்குலும் பகல் விடான்
அழிந்தியன்பிற் புல்லியே யரிவையுடை நன்னலம்
விழுந்தவண் மயக்கத்தில் வேந்தனினிச் செல்கின்றான்.
------------
125. யூகியின் செயல்
-
ஒழுகுங்காலை யூகியா முயிரினுஞ் சிறந்தவன்
எழில்பெருகுஞ் சூழ்ச்சிக்க ணினியதன் வரவதாற்
பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன்
எழின்மங்கை யிளம்பிடி யேற்றியேகக் கண்டவன்.
------------
126. இதுவுமது
-
மிஞ்சிநெஞ்சி லன்புடன் மீண்டுவர வெண்ணினன்
உஞ்சைநகர்க் கரசன்கேட் டுள்ளகத் தழுங்கினன்
விஞ்சுபடை மேலெழாமை விரகுட னறிந்தந்த
உஞ்சையெல்லை விட்டுவந்து யூகிபுட்ப கஞ்சென்றான்.
------------
127. யூகி இடபகன்பால் உதயணனைப் பற்றி வினாதலும் அவன் விடையும்
-
இடபகற்குத் தன்னுரை யினிதுவைத்து ரைத்துப்பொன்
முடியுடைய நம்மரசன் முயற்சியது வென்னென
பிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்தபின்
அடியிட விடம்பொறாமை யானைமண்ணிற் சாய்ந்ததே.
-----------
128. இதுவுமது
-
சவரர்தாம் வளைந்ததும் தாமவரை வென்றதும்
உவமையில் வயந்தகன்ற னூர்வந்துடன் போந்ததும்
தவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும்
குவிமுலைநற் கோதையன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும்.
------------
129. இதுவுமது
-
இழந்தபூமி யெண்ணில னினியபோகத் தழுந்தலும்
குழைந்தவ னுரைப்பயூகி கூரெயிறி லங்கநக்கு
விழைந்தவேந்தன் றேவியை விரகினாற் பிரித்திடின்
இழந்தமிக் கரசியல்கை கூடுமென வெண்ணினான்.
இவ்வாறு பெரிதும் விரும்பியுள்ள வாசவதத்தையை அவனிடத்தினின்றும் யாதானுமோருபாயத்தாலே பிரித்துவிடின் அவன் இழந்திருக்கின்ற அரசியல் அவனுக்குக் கைகூடிவருவதாம்; இல்லையே லில்லை என்று எண்ணினான் என்க. (9)
-------------
130. யூகியின் செயல்
-
சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன்
ஆங்கவ ளறியக்கூறி யானயூகி தன்னுயிர்
நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும்
பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன்.
---------------
131. இதுவுமது
-
படத்துருவி லொன்றினைப் பரந்தமேற்கண் ணாகவைத்
திடக்கணீக்கி யிட்டுமிக் கியல்புடன் கொடுத்துடன்
முடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள்
இடிக்குரனற் சீயமா மிறைவனையே கண்டனள்.
------------
132. சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்
-
வேந்தனுங்கண் டேவிரும்பி வினயஞ்செய் திருக்கெனப்
பாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லிப்பின்
சேந்தநின் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன்
போந்துபின் வராததென்ன புரவலநீ கூறென்றாள்.
------------
133. உதயணன் செயல்
-
அவனுரை யறிந்தில னறிந்தநீ யுரைக்கெனத்
தவிசிடை யிருந்தவ டான்படத்தைக் காட்டினள்
புவியரசன் கண்டுடன் புலம்பிமிக வாடிப்பின்
தவமலி முனிவனைத் தான்வணங்கிக் கேட்டனன்.
-------------
134. உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்
-
முடிமுத லரசினோடு முனிவறநின் றுணைவனை
வடிவுடன் பெறுவையென்ன வன்மையிற் றேறிமீக்
கடிகமழச் சாரலிற் கண்டமாத வன்மகள்
துடியிடை விரிசிகையைத் தோன்றன்மாலை சூட்டினான்.
---------------
135. உதயணனன் தழைகொணரப் போதல்
-
கலந்தன னிருந்தபின் கானகத் தழைதர
நலந்திகழ்நன் மாதர்செப்ப நரபதியும் போயினன்
கலந்திகழும் யூகியுங் காவலன் றன் றேவியைச்
சிலதினம் பிரிவிக்கச் சிந்தைகூரத் தோன்றினான்.
------------
136. யூகியின் செயல்
-
மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாந்தரைத்
துன்னுநன் கிருவரைத் தொக்குட னிருக்கவென்று
மன்னன்மனை தன்மனைக்கு மாநிலச் சுருங்கைசெய்
தன்னவன் மனைமுழுது மறைந்தவர் தீயிட்டனர்.
-----
137. சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்
-
நிலந்திகழ் சுருங்கையி னீதிமன்னன் றேவியை
இலங்குசாங்கி யம்மக ளெழில்பெறக் கொண்டுவந்
தலங்கலணி வேலினா னமைச்சன் மனைசேர்த்தனள்
துலங்கிவந் தடிபரவிச் சொல்லினிது சொல்லினான்.
-------------
138. யூகி வாசவதத்தையை வரங் கேட்டல்
-
என்னுடைநற் றாயேநீ யெனக்கொரு வரங்கொடு
நின்னரச னின்னைவிட்டு நீங்குஞ்சில நாளன்றி
நன்னில மடந்தைநமக் காகுவது மில்லையே
என்னவுடன் பட்டன ளியல்புடன் கரந்தனன்.
------------
139. உதயணன் மீண்டுவந்து வருந்துதல்
-
சவரர்வந்து தீயிட்டெனத் தஞ்செயலி னாக்கிமிக்
கவகுறிகள் கண்டரச னன்பிற்றேவிக் கேதமென்
றுவளகத் தழுங்கிவந் துற்றகரு மஞ்சொலக்
கவற்சியுட் கதறியே கலங்கிமன்னன் வீழ்ந்தனன்.
----------
140. இதுவுமது
-
பூண்டமார்ப னன்னிலம் புரண்டுமிக் கெழுந்துபோய்
மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவ னானென்றான்
நீண்டதோ ளமைச்சரு நின்றரசற் பற்றியே
வேண்டித்தா னுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான்.
-----------
141. உதயணன் வாசவதத்தையின் அணிகலன்கண்டழுதல்
-
கரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர்க ளென்றபின்
எரிப்பொன்னணி காட்டென வெடுத்துமுன்பு வைத்தனர்
நெருப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென
விருப்புடைநற் றேவிக்கு வேந்தன்மிக் கரற்றுவான்.
-----------
142. உதயணன் மனம் நொந்து அழுது புலம்புதல்
-
மண்விளக்க மாகிநீ வரத்தினெய்தி வந்தனை
பெண்விளக்க மாகிநீ பெறற்கரியை யென்றுதன்
கண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்கவான்
புண்விளக் கிலங்குவேற் பொற்புடைய மன்னவன்.
----------
143. இதுவுமது
-
மானெனும் மயிலெனும் மரைமிசைத் திருவெனும்
தேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும்
வானில மடந்தையே மாதவத்தின் வந்தனை
நானிடர்ப் படுவது நன்மையோநீ வீந்ததும்.
----------
144. இதுவுமது
-
நங்கைநறுங் கொங்கையே நல்லமைக் குழலியெம்
கொங்குலவு கோதைபொன் குழையிலங்கு நன்முகம்
சிங்கார முனதுரையும் செல்வி சீதளம்மதி
பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன்.
-----------
145. இதுவுமது
-
வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவிநீ
நாணின்பாவை தானுநீ நலந்திகழ் மணியுநீ
காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ
தோணிமுகங் காட்டெனச் சொல்லியே புலம்புவான்.
---------------
146. அமைச்சர் தேற்றுதல்
-
துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா
அன்புமிக் கரற்றுவதை யகல்வது பொருளென
நன்புறு மமைச்சர்சொல்ல நரபதியுங் கேட்டனன்
இன்புறும் மனைவிகாத லியல்புட னகன்றனன்.
-----
கலிவிருத்தம்
147. யூகி உருமண்ணுவாவிற் குரைத்தல்
-
அண்ண றன்னிலை யறிந்த யூகியும்
தி்ண்ணி தின்னியல் செய்கை யென்றுரு
ண்ணு வாவினை மன்ன னண்டையில்
எண்ணுங் காரிய மீண்டுச் செய்கென்றான்.
------------
148. அமைச்சர்கள் ஆராய்ந்து துணிந்தபடி வயந்தகன்
உதயணனுக்குக் கூறுதல்/
-
தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான்
துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன்
மன்னற் குறுதி மறித்தினிக் கூறும்
பொன்னடி, வணங்கிப் புரவலன் கேட்ப.
----------------
149. இதுவுமது
-
வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில்
இற்றவர்க் காட்டு மியல்பின னூலுரை
கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன்
தத்துவ முனியுள னாமினிச் சார்வோம்.
-------------
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
150. உதயணகுமரன் நாற்படையும் சூழ மகதநாடு செல்லுதல்
-
வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் றன்னை நோக்கி
அத்திசை போவோ மென்றே யகமகிழ்ந் தினிய கூறி
வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரி மேவ
ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே.
இலாவாண காண்டம் முற்றிற்று.
-------------
மூன்றாவது - மகத காண்டம்
151. உதயண குமரன் மீண்டும் வாசவதத்தையை நினைந்து வருந்துதல்
-
சயந்தியி னெல்லை விட்டுச் சாலவு மகத நாட்டுக்
கியைந்துநன் கெழுந்து சென்றே யிரவியி னுதய முற்றான்
நயந்தனன் றேவி காத னன்மனத் தழுங்கிப் பின்னும்
வியந்துநல் லமைச்சர் தேற்ற வெங்கடுங் கானம் புக்கான்.
-------------
152. இதுவுமது
-
செத்தநற் றேவி தன்னைத் திருப்பவு மீட்க லாமென்
றத்திசை முன்னி நல்ல வருவழிப் பட்டுச் செல்ல
அத்தியும் பிணையு மேக வாண்மயி லாடக் கண்டு
வத்தவன் கலுழ்ந்து ரைக்கு மனனமை மனையை யோர்ந்தே.
---------
153. உதயணன் மகதநாடெய்துதல்
-
கோட்டுப்பூ நிறைந்தி லங்குங் கொடிவகைப் பூவுங் கோலங்
காட்டுநந் தேவி யென்று கால்விசை நடவா மன்னன்
காட்டினன் குன்ற மேறிக் கானகங் கழிந்து போந்து
சேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறை மகதஞ் சேர்ந்தான்.
------------
154. உதயணன் முதலியோர் இராசகிரிய நகரத்துப் புறஞ்சேரியிற் றங்குதல்
-
மருவிய திருவி னானம் மகதவர்க் கிறைவ னாமம்
தருசக னென்னு மன்னன் றானைவேற் றலைவன் மாரன்
இருந்தினி துறையு மிக்க விராசநற் கிரியந் தன்னிற்
பொருந்திச்சென் னகர்ப்பு றத்திற் பொலிவுட னிருந்தா னன்றே.
------
155. வயந்தகன் காகதுண்ட முனிவனுக்குச் சூழ்ச்சி கூறுதல்
-
காமநற் கோட்டஞ் சூழக் கனமதி லிலங்கும் வாயிற்
சோமநற் றாப தர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில்
நாமநல் வயந்த கன்னும் நன்கறி காக துண்ட
மாமறை யாளற் கண்டு வஞ்சகஞ் செப்பி னானே.
------------
156. காகதுண்டகன் உதயணனைக் கண்டு கூறுதல்
-
திருநிறை மன்னன் றன்னைச் சீர்மறை யாளன் கண்டே
இருமதி யெல்லை நீங்கி யிப்பதி யிருப்ப வென்றும்
தருவனீ யிழந்த தேவி தரணியுங் கூடவென்ன
மருவியங் கிருக்கு மோர்நாண் மகதவன் றங்கை தானும்.
----------------
157. பதுமாபதியும் உதயணனும் காட்சியெய்துதல்
-
பருவமிக் கிலங்குங் கோதைப் பதுமைதே ரேறி வந்து
பொருவில்கா மனையே காணப் புரவலன் கண்டு கந்து
மருவும்வா சவதத் தைதான் வந்தன ளென்று ரைப்பத்
திருநகர் மாதுங் கண்டு திகைத்துளங் கவன்று நின்றாள்.
-------------
158. உதயணனும் பதுமாபதியும் களவுமணங் கூடுதல்
-
யாப்பியா யினியா ளென்னு மவளுடைத் தோழி சென்று
நாப்புகழ் மன்னற் கண்டு நலம்பிற வுரைத்துக் கூட்டக்
காப்புடைப் பதுமை யோடுங் காவலன் கலந்து பொன்னின்
சீப்பிடக் கண்சி வக்குஞ் சீர்மங்கை நலமுண் டானே.
-------
159. உதயணன் தோழர்க்குக் கூறுதலும் அவருடன்பாடும்
-
எழில்பெறு காமக் கோட்டத் தியற்கையிற் புணர்ந்து வந்து
வழிபெறு மமைச்ச ரோடு வத்தவ னினிய கூறும்
மொழியமிர் தந்ந லாளை மோகத்திற் பிரியே னென்னத்
தொழுதவர் பெறுக போகந் தோன்றனீ யென்று சொன்னார்.
----------------
160. உதயணன் பதுமாபதியுடன் கன்னிமாடம் புகுதல்
-
மாட்சிநற் சிவிகை யேறி மடந்தைதன் னோடும் புக்குத்
தாழ்ச்சியின் மாளி கைக்குட் டக்கவண் மனங்கு ளிர்ப்பக்
காட்டினன் வீணை தன்னைக் காவலன் கரந்தி ருப்ப
ஓட்டிய சினத்த னாய வுருமண்ணு விதனைச் செப்பும்.
--------------
161. உருமண்ணுவா வயந்தகன் முதலியோர்க்குக் கூறுதல்
-
ஆகிய தறிந்து செய்யு மருளுடை மனத்த னான
யூகியங் குஞ்சை தன்னை யுற்றருஞ் சிறைவி டுக்கப்
போகநற் றேவி யோடும் போந்தது போல நாமும்
போகுவ மன்னன் மாதைப் புதுமணம் புணரு வித்தே.
-------------
162. உருமண்ணுவாவின் செயல்
-
உருமண்ணு வாவ னுப்ப வுற்றமுந் நூறு பேர்கள்
மருவிய விச்சை தன்னான் மன்னவன் கோயி றன்னுள்
மருவினர் மறைந்து சென்றார் மன்னவன் றாதை வைத்த
பெருநிதி காண்கி லாமற் பேர்க்குநர்த் தேடு கின்றான்.
---------
163. உதயணகுமரன் மகதமன்னனைக் கண்டு கேண்மை கோடல்
-
யானறிந் துரைப்ப னென்றே யரசனைக் கண்டு மிக்க
மாநிதி காட்டி நன்மை மகதவ னோடுங் கூடி
ஊனமில் விச்சை தன்னா லுருமண்ணு பிரித லின்றிப்
பானலங் கிளவி தன்னாற் பரிவுட னிருக்கு நாளில்.
-------------
164. சங்க மன்னர்கள் மகதநாட்டின் மேற் படையெடுத்து வருதல்
-
அடவியா மரசன் மிக்க வயோத்தியர்க் கிறைவன் றானைப்
படையுறு சாலி யென்பான் பலமுறு சத்தி யென்பான்
முடிவிரி சிகையன் மல்லன் முகட்டெலிச் செவிய னென்பான்
உடன்வரு மெழுவர் கூடி யொளிர்மக தத்து வந்தார்.
---------------
165. அம்மன்னர் நாடழித்தல்
-
தருசகற் கினிதி னாங்க டருதிறை யிடுவ தில்லென்
றெரியென வெகுண்டு வந்தே யினியநா டழிக்க லுற்றார்
தருசக ராசன் கேட்டுத் தளரவப் புறத்த கற்ற
உருமண்ணு வாம னத்தி லுபாயத்தி லுடைப்ப னென்றான்.
-------------
166. உருமண்ணுவாவின் சூழ்வினை
-
கள்ளநல் லுருவி னோடுங் கடியகத் துள்ளே யுற்ற
வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவி னோடு
தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப் போந்து
பள்ளிப்பா சறைபு குந்து பலமணி விற்றி ருந்தார்.
-------------
167. கலிவிருத்தம்
-
மன்னன் வீர மகதற்குக் கேளாத்தம்
இன்னு ரைக ளியல்பின் வரவரத்
துன்னு நாற்படை வீடுதோன் றிரவிடை
உன்னி னர்கரந் துரைகள் பலவிதம்.
------
168. பகையரசர் ஐயுற்று ஓடுதலும் மீண்டுங் கூடுதலும்
-
உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின்
முரியுஞ் சேனை முயன்றவ ரோடலிற்
றெருளி னர்கூடிச் சேரவந் தத்தினம்
மருவி யையம் மனத்திடை நீங்கினார்.
------------
169. இதுவுமது
-
இரவு பாசறை யிருந்தவர் போனதும்
மருவிக் கூடியே வந்துடன் விட்டதும்
விரவி யொற்றர்கள் வேந்தர்க் குரைத்தலின்
அரசன் கேட்டுமிக் கார்செய லென்றனன்.
-------------
170. ஒற்றர் அங்ஙனம் செய்தது உதயண மன்னன் எனலும் உருமண்ணுவா தருசகனைக் கண்டு கூறலும்
-
வார ணிக்கழல் வத்தவன் றன்செயல்
ஓரணி மார்ப னுருமண்ணு வாவுமிக்
கேரணி யரச ருக்கியல் கூறலும்
தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தான்.
---
171. தருசகன் உதயணனை எதிர்சென்று கேண்மை கோடல்
-
ஆரா வுவகையுள் ளாகி யரசனும்
பேரா மினியயாழ்ப் பெருமகன் றன்னையே
சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன்
நேரா மாற்றரை நீக்குவ னென்றான்.
------------
வேறு
172. உதயணன் படையுடன் சென்று பகைவரை வெல்லுதல்
-
உலம்பொருத தோளுடை யுதயண குமரனும்
நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப்
புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன்
நலம்பெறத் திறையுட னரபதியு மீண்டனன்.
------------
தருசகன் உதயணனுக்குப் பதுமாபதியை மணஞ்செய்து கொடுத்தல்
-
வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத்
தருசகனெ திர்கொண்டு தன்மனை புகுந்துபின்
மருவநற் பதுமையா மங்கைதங்கை தன்னையே
திருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே யளித்தனன்.
--------
174. உதயணன் தருசகன் உதவியுடன் தன் பகைமேற் சேறல் இதுமுதல் ஐந்து செய்யுட்கள் ஒரு தொடர்
-
புதுமணக் கோலமிவர் புனைந்தனரியற்றிப்பின்
பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன்
துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம்
அதிர்மணி யாற்றுந்தே ராயிரத் திருநூறே.
-----------
175.
-
அறுபதினெண் ணாயிர மானபடை வீரரும்
நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும்
பெறுகவென் றமைத்துடன் பேர்வருட காரியும்
உறுவடிவேற் சத்தியு முயர்தரும தத்தனும்.
------------
176.
-
சத்தியகா யன்னுடன் சாலவு மமைச்சரை
வெற்றிநாற்ப டைத்துணை வேந்தவன்பிற் செல்கென
முற்றிழைநல் அரிவைக்கு முகமலரச் சீதனம்
பற்றின்பி னாலளித்துப் பாங்குடன் விடுத்தனன்.
------------
177.
-
வெல்லுமண்ணலை ம்மிக வேந்தனன் னயஞ்சில
சொல்லிநண்பி னாலுரைத்துத் தோன்றலை மிகப்புலிச்
செல்கெனா விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன்
எல்லைதன்னா டெய்துழி யினியதம்பியர் வந்தனர்.
--------------
178. பிங்கல கடகர் படைகொடு வருதல்
-
பிங்கல கடகரெனப் பீடுடைக் குமரரும்
தங்குபன்னி ராயிரம் தானைவல்ல வீரரும்
அங்குவந்தவ் வண்ணலை யடிவணங்கிக் கூடினர்
பொங்குபுறங் கௌசாம்பியிற் போர்க்களத்தில் விட்டனர்.
----------
179. உதயணகுமரன் வருடகாரனுக்குக் கூறுதல்
-
வருடகா ரனையழைத்து வத்தவ னியம்புமிப்
பருமிதநற் சேனையுள்ள பாஞ்சால ராயனிடம்
திருமுடி யரசரைத் திறத்தினா லகற்றெனப்
பொருளினவன் போந்தபின்பு போர்வினை தொடங்கினர்.
----------
180. வருடகாரன் துணையரசரைப் பிரித்தலும் ஆருணி போர்தொடங்கலும்
-
அமைச்சனுஞ்சென் றவ்வண்ண மதிர்கழனல் வேந்தரைச்
சமத்தினி லகற்றினன் சாலவும்பாஞ் சாலனும்
அமைத்தநாற் படையுட னமர்ந்துவந் தெதிர்த்தனன்
அமைத்திருவர் விற்கணைக ளக்கதிர் மறைத்தவே.
----------
181. வேறு -போர் நிகழ்ச்சி
-
விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுற வேறவும்
பரிந்து பேய்க்கண மாடவும் பலவா நரிபறைந் துண்ணவும்
முரிந்த முண்டங்க ளாடவும் முரிந்த மாக்களி றுருளவும்
வரிந்த வெண்சிலை மன்னவன் வந்த வன்கண் சிவந்தவே.
-------------
182. உதயணன் ஆருணி மன்னனைக் கொன்று வீழ்த்துதல்
-
மாற்ற வன்படை முறிந்தென மன்ன வன்படை யார்த்திடத்
தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன் றூய காளைதன் வாளினால்
மாற்ற லன்றனைக் கூற்றுண வண்மை யிவ்விருந் தார்கென
ஏற்ர வகையினி லிட்டன னிலங்கு வத்தவ ராசனே.
-----------
183. உதயணகுமரன் கோசம்பி நகருட் புகுதல்
-
பகைய றவேயெ றிந்துடன் பாங்கிற் போர்வினை தவிர்கென
வகைய றவேப டுகளங் கண்டு நண்ணிய மற்றது
தொகையு றுந்தன தொல்படை சூழ வூர்முக நோக்கினன்
நகையு றுந்நல மார்பனு நகர வீதியில் வந்தனன்.
-----------
(வேறு)
184. உதயணன் அரண்மனை புகுதல்
-
மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக்
கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார்
பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல்
ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன்.
----------
185. உதயணன் போரில் விழுப்புண் பட்ட மறவர்க்கு ஆவன செய்து பின் திருமுடி சூடி ஆட்சி செலுத்துதல்
-
படுகளத்தி னெந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன்
இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின்
தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திட
முடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள்.
-----------
மூன்றாவது மகதகாண்டம் முற்றும்.
நான்காவது - வத்தவ காண்டம்
(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
186. உதயணகுமரன் திருவோலக்க மண்டபத்தில் வீற்றிருத்தல்
-
மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப்
பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாச னத்தில்
தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையி னீழல்
மின்சொரி தரள வேந்தன் வீற்றி ருந்த போழ்தின்.
----------------
187. உதயண மன்னன் அளியும் தெறலும்
-
மாற்றலர் தூதர் வந்து வருதிறை யளந்து நிற்ப
ஆற்றலர் வரவ வர்க்கே யானபொன் றுகில ளித்தே
ஏற்றநற் சனங்கட் கெல்லா மினிப்பொரு ளுவந்து வீசிக்
கோற்றொழி னடத்தி மன்னன் குறைவின்றிச் செல்லு கின்றான்.
-----------
188. உதயணன் பத்திராபதி என்னும் பிடிக்கு மாடமும் உருவமும் எடுத்தல்
-
மதுரவண் டறாத மாலை மகதவன் றங்கை யாய
பதுமைதன் பணைமு லைமேற் பார்த்திபன் புணர்ந்து செல்ல
துதிக்கைமா வீழ்ந்த கானந் தோன்றலு மாடம் பண்ணிப்
பதியினு மமைத்துப் பாங்கிற் படிமமு மமைத்தா னன்றே.
--------------
189. உதயணன் கோடவதி யென்னும் யாழை மீண்டும் பெறல்
-
அருமறை யோதி நாம மருஞ்சன னந்த ணன்றான்
திருவுறை யுஞ்சை நின்று திகழ்கொடிக் கௌசாம் பிக்கு
வருநெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு
பொருந்தவே கொண்டு வந்து புரவலற் கீந்தா னன்றே.
--------
190. பதுமாபதி உதயணனிடம் யாழ் பயில விரும்புதல்
-
மதுமலர்க் குழலி விண்மின் மாலைவேல் விழிமென் றோளி
பதுமைவந் தரசற் கண்டு பன்னுரை யினிது கூறும்
மதியின்வா சவதத் தைதன் வண்கையி னதனைப் போல
விதியினான் வீணை கற்க வேந்தநீ யருள்க வென்றாள்.
---------------
191. உதயணன் வாசவதத்தையை நினைந்து வருந்தித் துயில்தலும் கனவு காண்டலும்
-
பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொருமனத் துருகி மன்னன்
ஒள்ளிதழ்த் தத்தை தன்னை யுள்ளியே துயிலல் செய்ய
வெள்ளையே றிருந்த வெண்டா மரையினைக் கொண்டு வந்து
கள்ளவிழ் மாலைத் தெய்வங் கனவிடைக் கொடுப்பக் கண்டான்,
------------
192. உதயணன் ஒரு முனிவனிடம் சென்று கனவின் பயன் வினாதல்
-
கங்குலை நீங்கி மிக்கோர் கடவுளை வினவச் சொல்வார்
அங்கயற் கண்ணி் தானு மாரழல் வீந்தா ளல்லள்
கொங்கைநற் பாவை தன்னைக் கொணரநீ பெறுவை யின்பம்
இங்குல கெங்கு மாளு மெகழிற்சுதற் பெறுவ ளென்றார்.
-------------
193. உதயணன் கனாப்பயன் கேட்டுக் களிகூர்தல்
-
வெள்ளிய மலையின் மீதே விஞ்சைய ருலக மெல்லாம்
தெள்ளிய வாழி கொண்டு திக்கடிப் படுத்து மென்ன
ஒள்ளிய தவத்தின் மிக்கோ ருறுதவ ருரைத்த சொல்லை
வள்ளலு மகிழ்ந்து கேட்டு மாமுடி துளக்கி னானே.
-------------
194. உருமண்ணுவா சிறைவீடு பெற்றது
-
என்றவ ருரைப்பக் கேட்டே யிறைஞ்சிநன் கடிப ணிந்து
சென்றுதன் கோயில் புக்குச் சேயிழை பதுமை தன்னே
டொன்றினன் மகிழ்ந்து சென்னா ளுருமண்ணு வாவு முன்பு
வென்றிவேன் மகதன் மாந்த ரால்விடு பட்டி ருந்தான்.
-------------
195. உருமண்ணுவா உதயணன்பால் வருதல்
-
மீண்டவன் வந்தூர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக்
காண்டறி வாள னென்றே காவலன் புல்லிக் கொண்டு
மாண்டவன் வந்த தொப்ப வரிசையின் முகமன் கூறி
வேண்டவாந் தனிமை தீர்ந்தே விரகுட னின்புற் றானே.
------------
196. யூகி முதலியோர் வாசவதத்தையைக் கோசம்பிக்குக் கொணரல்
-
வாரணி கொங்கை வேற்கண் வாசவ தத்தை தானும்
ஊரணி புகழி னான யூகியு மற்றுள் ளாரும்
தாரணி கொடியி லங்குஞ் சயந்தியி னின்றும் போந்து
பாரணி கோசம் பிப்பாற் பன்மலர்க் காவுள் வந்தார்.
------------
197. உதயணன் யூகி முதலியோரை வினவுதல்
-
நயந்தநற் கேண்மை யாளர் நன்கமைந் தமைச்சர் தம்முள்
வயந்தக னுரைப்பக் கேட்டு வந்தவன் காவு சேரப்
பயந்தவ ரடியில் வீழப் பண்புடன் றழுவிக் கொண்டு
வியந்தர சியம்பு நீங்கள் வேறுடன் மறைந்த தென்னை.
-------------
198. யூகி காரணம் கூறுதல்
-
இருநில முழுதும் வானு மினிமையிற் கூடி னாலும்
திருநில மன்ன ரன்றிச் செய்பொரு ளில்லை யென்று
மருவுநூ னெறியி னின்றி வன்மையாற் சூழ்ச்சி செய்தேன்
அருளுடன் பொறுக்க வென்றா னரசனு மகிழ்வுற் றானே.
-----------
199. உதயணன் வாசவதத்தை முதலியோரொடு மகிழ்ந்திருத்தல்
-
ஆர்வமிக்க கூர்ந்து நல்ல வற்புதக் கிளவி செப்பிச்
சீர்மைநற் றேவி யோடுஞ் செல்வனு மனைபு குந்தே
ஏர்பெறும் வாச வெண்ணெ யெழிலுடன் பூசி வாச
நீர்மிக வாடி மன்ன னேரிழை மாதர்க் கூட.
--------------
200. பதுமாபதியின் வேண்டுகோள்
-
யூகியு நீரி னாடி யுற்றுட னடிசி லுண்டான்
நாகநேர் கால மன்ன னன்குட னிருந்த போழ்தின்
பாகநேர் பிறையா நெற்றிப் பதுமையு மிதனைச் சொல்வாள்
ஏகுக செவ்வித் தந்தை யெழின்மனைக் கெழுக வென்றாள்
--------------
201. உதயணன் வாசவதத்தை மாளிகைக்கெழுந்தருளலும், அவள் ஊடுதலும்
-
என்றவள் சொல்ல நன்றென் றெழின்முடி மன்னன் போந்து
சென்றவண் மனைபு குந்து செல்வனு மிருந்த போழ்தின்
வென்றிவேற் கண்ணி னாளும் வெகுண்டுரை செப்பு கின்றாள்
கன்றிய காமம் வேண்டா காவல போக வென்றாள்.
-------------
202. உதயணன் வாசவதத்தை ஊடலைப் போக்குதல்
-
பாடக மிரங்கும் பாதப் பதுமையி னோடு மன்னன்
கூடிய கூட்டந் தன்போற் குணந்தனை நாடி யென்ன
ஊடிய தேவி தன்னை யுணர்வினு மொளியினாலும்
நாடினின் றனக்கன் னாடா னந்திணை யல்ல ளென்றான்
--------------
203. உதயணன் வாசவதத்தை யூடல்தீர்த்துக் கூடுதல்
-
நங்கைதன் மனங்க லங்கா நலம்புகழ்ந் தூட னீக்கி
வெங்களி யானை மற்றப் பிடியொடு மகிழ் வதேபோற்
பொங்கிள முலையில் வாசப் பூசுசாந் தழியப் புல்லிச்
சிங்கவே றனைய காளை செல்வியைச் சேர்ந்தா னன்றே.
---------
204. இதுவுமது
-
உருவிலி மதன்க ணைக ளுற்றுடன் சொரியப் பாய
இருவரும் பவளச் செவ்வா யின்னமிர் துண்டு வேல்போல்
திருநெடுங் கண்சி வப்ப வடிச்சிலம் போசை செய்ய
மருவிய வண்டு நீங்க மலர்க்குழல் சரிய வன்றே.
------------
205. இதுவுமது
-
கோதையும் சுண்ணத் தாதுங் குலைந்துடன் வீழ மிக்க
காதலிற் கழுமி யின்பக் கரையழிந் தினிதி னோடப்
போதவும் விடாது புல்லிப் புரவல னினிய னாகி
ஏதமொன் றின்ரிச் செங்கோ லினிதுடன் செலுத்து நாளில்.
--------
206. உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்
-
ஆனதன் னாம மிட்ட வாழிமோ திரத்தை யீந்தே
ஊனுமிழ் கதிர்வேன் மன்ன னுருமண்ணு வாவு தன்னைச்
சேனைநற் பதிநீ யென்று திருநிகர் பதுமை தோழி
ஈனமி லிராச னையை யெழில்வேள்வி யாற்கொ டுத்தான்.
---------------
207. உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் ஊர் வழங்குதல்
-
சயந்தியம் பதியுஞ் சால விலாவாண நகரு மீந்தே
இயந்தநல் லிடப கற்கு மினியபுட் பகத்தைச் சூழ்ந்த
செயந்தரு வளநன் னாடு சிறந்தவைம் பதும ளித்து
வயந்தகன் றனக்கு வாய்ந்த பதினெட்டூர் கொடுத்தா னன்றே.
-------
208. யூகிக்கு ஊர் வழங்குதல்
-
ஆதிநன் மாமன் வைத்த வருந்திறை யளக்கு நல்ல
சேதிநன் னாட்டை யூகிக் காகநற் றிறத்தி னீந்து
சோதிநல் லரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க் கெல்லாம்
வீதிநன் னகர்கள் விட்டு வீறுடன் வீற்றி ருந்தான்.
-----------
209. உதயண குமரன் பிரச்சோதனன் உய்த்த திருமந்திரவோலை பெறல்
-
பேசரும் பெருமை சால்ப்ரச் சோதனன் றூதர் வந்து
வாசகந் தன்னைக் காட்ட வந்தவன் மனம கிழ்ந்து
வாசவ தத்தை யோடு மன்னிய வமைச்சர் கூட
வாசகஞ் சொல்க வென்று வரிசையிற் கேட்கின் றானே.
------
210. பிரச்சோதனன் ஓலையிற் கண்ட செய்தி
-
பிரச்சோத னன்றா னென்னும் பெருமக னோலை தன்னை
உரவுச்சேர் கழற்கான் மிக்க உதயண குமரன் காண்க
வாவுச்சீர்க் குருகு லத்தின் வண்மையான் கோடல் வேண்டி
வரைவனச் சார றன்னில் வன்பொறி யானை விட்டேன்.
------------
211. இதுவுமது
-
211. கலந்தவை காண வந்த காவலர் நின்னைப் பற்றிச்
சிலந்திநூ றன்னா லார்த்த சிங்கம்போ லார்த்துக் கொண்டு
நலந்திகழ் தேரி னேற்றி நன்குவுஞ் சையினி தன்னிற்
பெலந்திரி சிறையில் வைத்த பிழையது பொறுக்க வென்றும்.
-----------
212. இதுவுமது
-
கோமானே யெனவே யென்னைக் கோடனீ வேண்டு மென்றும்
மாமனான் மருக னீயென் மாமுறை யாயிற் றென்றும்
ஆமாகும் யூகி தன்னை யனுப்ப யான் காண்டல் வேண்டும்
பூமாலை மார்ப வென்றும் பொறித்தவா சகத்தைக் கேட்டான்.
-------------
213. யூகி உஞ்சைக்குப் போதலும் பிரச்சோதனன் வரவேற்றலும்
-
மன்னவ னனுப்ப யூகி மாநக ருஞ்சை புக்கு
மன்னர்மா வேந்தன் றன்னை வணங்கினன் கண்டிருப்ப
மன்னனு முடியசைத்த மைச்சனை நெடிது நோக்கி
மன்னிய வுவகை தன்னான் மகிழ்வுரை விளம்பி னானே.
தன்னெஞ்சத்தே நிலை பெற்ற மகிழ்ச்சி காரணமாக அவ்வமைச்சன் மகிழ்தற்குக் காரணமான முகமன் மொழிகளைக் கூறினன் என்க. (28)
-------------
214. பிரச்சோதனன் முரசறைவித்தல்
(கலிவிருத்தம்)
-
சீர்ப்பொழி லுஞ்சையுஞ் சீர்க்கௌ சாம்பியும்
பார்தனில் வேற்றுமை பண்ணுதல் வேண்டோம்
ஆர்மிகு முரச மறைகென நகரில்
தார்மிகு வேந்தன் றரத்தினிற் செப்பினன்.
--------------
215. யூகியை அரசன் பாராட்டல்
-
தருமநன் னூல்வகை சாலங் காயனோ
டருமதி யூகியு மன்பி னுரைத்தான்
பெருவிறல் வேந்தனும் பெறுத லரிதெனத்
திருநிறை யூகியைச் செல்வன் மகிழ்ந்தான்.
--------
216. இதுவுமது
-
கவ்விய தகலமுங் காட்சிக் கினிமையும்
சொல்லருஞ் சூட்சியுஞ் சொற்பொருட் டிண்மையும்
வல்லமை யிவனலான் மாந்த ரில்லையின்
றெல்லையில் குணத்தின னென்றுரை செய்தனன்.
----------
217. இதுவுமது
-
இன்னவற் பெற்றவர்க் கேற்ற வரசியல்
இன்னவ ரின்றி யிலையர சென்றே
இன்னன நீடிய வியல்பிற் பிறவுரை
மன்னவ னாடி மகிழ்வித் திருந்தபின்.
----------
218. பிரச்சோதன மன்னன் யூகிக்குத் திருமணஞ் செய்வித்தல்
-
சாலங் காயன் சகோதர மானநன்
னீலங் காய்ந்த நெடுவேல் விழிநுதற்
பாலங் கோர்பிறை யாம்படா வெம்முலைக்
கோலங் காரன்ன கூரெயி றாப்பியும்.
-------------
219. இதுவுமது
-
பரதகன் றங்கை பான்மொழி வேற்கணி
திருநி லம்புகழ் திலதமா சேனையும்
பெருநில மறிய மணமிகப் பெற்றுடன்
அரிய யூகிக் கரசன் கொடுத்தனன்.
---------
220. யூகி வத்தவ நாடு புகுந்து உதயணனைக் காண்டல்
-
சென்மதி நீயெனச் செல்ல விடுத்தனன்
நன்முது நகர்முன் னாடிப் போவெனப்
பன்மதி சனங்கள் பரவி வழிபட
வென்மதி யூகிபோய் வேந்தனைக் கண்டனன்.
----------
தேவிமார் உதயணனைப் பந்தடிகாண அழைத்தல்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
-
வத்தவ குமரன் பாதம் வந்தனை செய்த மைச்சன்
இத்தல முழுது மாளு மினியநன் மாமன் சொன்ன
ஒத்தநன் மொழியைக் கேட்டே யுவந்துட னிருந்த போழ்தில்
சித்திரப் பாவை மார்கள் செல்வனை வணங்கிச் சொல்வார்.
---------------------
222. உதயணன் பந்தடி காணல்
-
பந்தடி காண்க வென்னப் பார்த்திப னினிய னாகிக்
கந்துகப் பூசல் காணக் கலிற்றின்மீ தேறி வந்து
கொந்தலர் மாலை மாதர் குழுவுடன் சூழ நிற்ப
வந்தனள் பதுமை தோழி வனப்பிரா சனையென் பாளாம்.
---------
223. மகளிர் பந்துப் போர் இராசனை
-
ஓரேழு பந்து கொண்டே யொன்றென்றி னெற்றிச் செல்லப்
பாரெழு துகளு மாடப் பலகல னொலிப்ப வாடிச்
சீரெழு மாயிரங்கை சிறந்தவ ளடித்து விட்டாள்
காரெழு குழலி நல்ல காஞ்சன மாலை வந்தாள்.
------
224. காஞ்சனமாலை
-
வேய்மிகு தடக்கை தன்னால் வியந்துபந் துடனே யேந்திக்
காய்பொனின் கலன்க ளார்ப்பக் கார்மயி லாட்டம் போல
ஆயிரத் தைஞ்ஞா றேற்றி யடித்தன ளகல வப்பால்
ஆய்புகழ்ப் பதுமை தாதி யயிராப திபந்து கொண்டாள்.
---------
225. அயிராபதி
-
சீரேறு மிமில்போற் கொண்டைச் சில்வண்டுந் தேனும் பாடப்
பாரோர்க ளினிது நோக்கும் பல்கலஞ் சிலம்போ டார்ப்ப
ஈராயி ரங்கை யேற்றி யிருகரத் தடித்து விட்டாள்
தோராத வழகி தத்தை தோழி விசுவ லேகை வந்தாள்.
--------
226. விச்சுவலேகை
-
கருங்குழ னெடுவேற் கண்ணாள் காரிகை பந்தெ டுத்துப்
பெருங்கல னினிதி னார்ப்பப் பெய்வளை கலக லென்ன
ஒருங்குமுன் கையின் மீதி லோரைஞ்ஞூ றடித்து விட்டாள்
கருங்கணி பதுமை தோழி காரிகை யொருத்தி வந்தாள்
-----------
227. ஆரியை
-
ஆரியை யென்னு நாம வரிவைகைக் கொண்டு பந்தைச்
சேரமின் சிலம்பு மார்ப்பச் சிறுநுதன் முத்த ரும்பச்
சீரின்மூ வாயி ரங்கை சிறந்தவ ளடித்த பின்பு
பேரிசைத் தத்தை யாயம் பெருங்குழாத் தினிதி னோக்காள்.
-------
228. மானனீகை வருதல்
-
அருவரு மேற்பா ரின்றி யோர்ந்தவ ணெஞ்சங் கூர்ந்து
திருநுதன் மாது நொந்து சிறப்பின்றி யிருந்த போழ்தின்
மருவுகோ சலத்து மன்னன் மகளுரு வரிவை நாமம்
சுரிகுழன் மான னீகை சொலற்கருங் கற்பி னாளே.
-----------
229. இதுவுமது
-
இளம்பிறை நுதல்வேற் கண்ணி யினியவிற் புருவ வேய்த்தோள்
இளங்கிளி மொழிநற் கொங்கை யீடில்பொற் கலச மல்குல்
இளமணிப் படம்பொன் வாழை யிருகுறங் காலம் பண்டி
இளம்புற வடிக ளாமை யிடைமின் பூங் குழலி னாளே.
----------
230. இதுவுமது
-
ஆங்கொரு கார ணத்திற் றத்தைபால் வந்தி ருந்தாள்
பூங்கொடி தோல்வி கண்டு பொறுப்பிலா மனத்த ளாகித்
தீங்குறு தத்தை தன்னைச் சீருடன் வணங்கிப் போந்து
பாங்குறு மிலக்க ணங்கள் பந்தடி பலவுஞ் சொன்னாள்.
-----------
(கலிப்பா)
231. காஞ்சனமாலை பந்தடித்தல்
-
மூன்றுபத் திரண்டுநன் மூரிப்பந்தெ டுத்துடன்
தோன்றிரண்டு கையினுந் தொடுத்தினி தடித்தலும்
ஆன்றகையி னோட்டலு மலங்கலுட் கரத்தலும்
ஈன்றரவி னாடலு மிறைஞ்சிநிமிர்ந் தாடினாள்.
----------
232. இதுவுமது
-
முட்டில்கோல வட்டணை முயன்றுபத்தி யிட்டுடன்
நட்டணை நடனமு நயந்தினிதி னாடவும்
பட்டுடையின் வேர்நுதற் பாங்கினிற் றுடைப்பவும்
இட்டிடை துவளவு மினியபந் தடித்தனள்.
----------
233. மானனீகையை அனைவரும் பாராட்டுதல்
-
பரிவுகொண் டனைவரும் பண்டறியோ மென்மரும்
விரிவுவான் மடந்தையோ வியந்திரியோ வென்மரும்
தரிவுவிச்சை மங்கையோ தான் பவண நாரியோ
விரிவுறிந் நிலத்திடை வேறுகண்ட தில்லென்பார்.
--------
234. மானனீகையின் பந்துகளின் செலவு வகைகள்
-
காந்தணன் ஒருமுன் கைக் கன்னியன் விரலினின்
ஏந்தினளெ டுத்தடிக்க விறைவளை யொலிவிடப்
போந்தன விசும்பினும் பொங்குநன் னிலத்தினும்
சூழ்ந்துகந் தெழுந்தன சூறாவளிக் ளென்னவே.
-----------
235. பந்தாடுங்காலத்து மானனீகையின் நிலைமை
-
சிலம்புகிண் கிணிசில சீர்க்கலன்க ளார்ப்பவும்
வலம்புரி மணிவடம் வளரிள முலைமிசை
நலம்பெற வசைந்திட நங்கைபத் தடித்திடப்
புலம்புவண்டு தேனினம் பூங்குழன்மே லாடவே.
---------------
236. மானனீகையின்பால் உதயணன் காதல் கோடல்
-
பாடகச்சி லம்பொலி பண்ணினு மினிதெனச்
சூடகத் தொலிநல சுரருடைய கீதமே
ஆடகம ணித்தொனி யரசுளங் கவர்ந்துடன்
கூடகம னத்தினற்கு மரனினிய னாயினன்.
237. மானனீகை எண்ணாயீரங்கை பந்தடித்து நிறுத்தல்
-
மாறுமா றெழுவதும் வகையுடன் னிழிவதும்
வீறுமாத ராடவும் வேந்தனுடன் மாதரும்
கூறுமிவ ளல்லது குவலயத்தி னில்லையென்
றேறுபந்தி னெற்றிக்கை யெண்ணாயிர மடித்தனள்.
----------
238. மானனீகை புணர்வும் வாசவதத்தை சினமும்
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
-
பிடிமிசை மாதர் போந்து பெருமணக் கோயில் புக்கார்
கடிமலர்க் கோதை மன்னன் காவிநன் விழிமா னீகை
இடிமின்னி னுசுப்பி னாளை யின்புறப் புணர்ந்தி ருப்பத்
துடியிடைத் தத்தை கேட்டுத் தோற்றிய சீற்றத் தானாள்.
------------
239. மானனீகை மணம்
-
துன்னிரு ணீங்கிக் காலை தூமலர் கொண்டு தத்தை
மன்னவ னடிவ ணங்க மனமகிழ் வின்றி நின்ற
அன்னமென் னடையி னாளை யகமகிழ் குளிரக் கூறி
மன்னன்மா னீகை தன்னை மணமிகச் செய்து கொண்டான்.
-------------
240. விரிசிகை மணம்
-
தேவியர் மூவர் கூடத் தேர்மன்னன் சேர்ந்து சென்னாட்
காவின்முன் மாலைசூட்டிக் காரிகை கலந்து விட்ட
பூவின்மஞ் சரியைப் போலும் பொற்புநல் விரிசி கையைத்
தாவில்சீர் வேள்வி தன்னாற் றரணீசன் மணந்தா னன்றே.
---------
241. மன்னன் ஆட்சிச் சிறப்பு
-
நட்புடைக் கற்பு மாதர் நால்வரு மன்ன னுள்ளத்
துட்புடை யிருப்ப நாளு மொருகுறை வின்றித் துய்த்துத்
திட்புடை மன்னர் வந்து திறையளந் தடிவ ணங்க
நட்புடை நாட்டை யெல்லா நரபதி யாண்டு சென்றான்.
நான்காவது வத்தவகாண்டம் முற்றும்
-----------
ஐந்தாவது - நரவாகன காண்டம்
242. வாசவதத்தை வயிறு வாய்த்தல்
-
242. எத்திக்கு மடிப்ப டுத்தி யெழில்பெறச் செங்கோல் செல்லும்
பெற்றிசெய் வேந்தன் றன்னைப் பெருமைவேற் றானை மன்னை
வித்தைசெய் சனங்கண் மாந்தர் வியந்தடி வணங்க மின்னும்
முற்றிழை மாலைத் தத்தை முனிவில்சீர் மயற்கை யானாள்.
----------
243. வாசவதத்தையின் வயாவிருப்பம் அறிதல்
-
நிறைபுகழ் வனப்பு நங்கை நிலவிய வுதரந் தன்னுட்
பிறையென வளரச் செல்வன் பேதையும் விசும்பிற் செல்லும்
குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தி னெண்ணி
அறைபுக ழமைச்சர் தம்மை யழைத்தனன் வினவி னானே.
------------
244. உருமண் ணுவா கூற்று
-
உருமண்ணுவா விதனைச் செப்பு முன்னொரு தினத்தின் வேட்டைப்
பெருமலை வனத்தி னீரின் வேட்கையாற் பிறந்த துன்பம்
மருவுறு வருத்தங் கண்டோர் வானவன் வந்து தோன்றிப்
பெருமநீ ருண்ணக் காட்டிப் பெரிடர் தீர்த்தானன்றோ.
----------
245. இதுவுமது
-
இன்னமோ ரிடர்வந் தாலு மென்னைநீர் நினைக்க வென்று
மன்னுமோர் மந்தி ரந்தான் வண்மையி னளித்துப் போந்தான்
சொன்னமா மந்தி ரத்தைச் சூழ்ச்சியி னினைக்க வென்றான்
பின்னவ னினைத்த போழ்தே பீடுடை யமரன் வந்தான்.
------------
246. தேவன் கூற்று
-
பலவுப சாரஞ் சொல்லப் பார்மன்னற் கிதனைச் செப்பும்
நலிவுசெய் சிறையிற் பட்ட நாளிலுஞ் சவரர் சுற்றி
வலியவந் தலைத்த போதும் வாசவ தத்தை நின்னைச்
சிலதினம் பிரிந்த போதுஞ் செற்றோரைச் செகுத்த போதும்.
-----------
247. இதுவுமது
-
மித்திர னென்றே யென்னை வேண்டிமுன் னினைத்தா யில்லை
பொற்றிரு மார்ப விந்நாட் புதுமையி னினைத்த தென்னை
உத்தரஞ் சொல்க வென்ன வொளியுமி ழமரன் கேட்கச்
சித்திரப் பாவை வானிற் செலவினை வேட்டா ளென்றான்.
-------------
248. இதுவுமது : உதயணன் கூற்று
-
எங்களிற் கரும மாக்கு மியல்புள் தீர்த்துக் கொண்டோம்
திங்களின் முகத்திற் பாவை செலவுநின் னாலே யன்றி
எங்களி லாகாதென்றிப் பொழுதுனை நினைந்தே னென்ன
நன்கினி யமரன் கேட்டு நரபதி கேளி தென்றான்.
--------
249. தேவன் மீண்டும் மந்திரம் செவியறிவுறுத்தல்
-
வெள்ளிய மலையிற் றேவன் விரைக் குழலாள் வயிற்றின்
உள்ளவின் பத்தி னாலே வுலவுவான் சிந்தை யானாள்
கள்ளவிழ் மாலை வேந்தன் கதிர்மணித் தேரி னேறிப்
புள்ளெனப் பறக்க மந்த்ர மீதெனக் கொடுத்துப் போந்தான்.
----------
250. உதயணன் முதலியோர் தேரிலேறி வானத்தே பறந்து போதல்
-
வெற்றித்தே ரேறி வென்வேல் வேந்தனுந் தேவி தானும்
மற்றுநற் றோழன் மாரும் வரிசையி னேறி வானம்
உற்றந்த வழிய தேகி யுத்தர திக்கி னின்ற
பெற்றிநல் லிமயங் கண்டு பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றான்.
-----------
251. இதுவுமது
-
உதயநற் கிரி.யும் கண்டே யுற்றுடன் றெற்திற் சென்று
பொதியமா மலையும் காணாப் பொருவில்சீர்க் குடபா னின்ற
மதிகதி ரவியு மத்த வான்கிரி கண்டு மீண்டும்
இதமுள தேசம் பார்த்தே யினியதம் புரி.ய டைந்தார்.
-----------
252. நரவாகனன் பிறப்பு
-
மாதுதன் வயாநோய் தீர்ந்து வளநகர் புக்க பின்பு
தீதின்றிக் கோள்க ளெல்லாஞ் சிறந்துநல் வழியை நோக்கப்
போதினற் குமரன் றேன்றப் புரவல னினிய னாகிச்
சோதிப்பொன் னறைதி றந்து தூவினன் சனங்கட் கெல்லாம்.
------
253. உதயணன் முதலியோர் மக்கட்குப் பெயரிடுதல்
-
நரவாக னன்னே யென்று நரபதி நாமஞ் செய்தான்
விரிவாகு மதிய மைச்சர் மிக்கநாற் குமரர் பேர்தாம்
பரிவார்கோ முகனும் பாங்காந் தரிசக னாக தத்தன்
குரவம்பூ மேனி யான குலமறி பூதி யாமே.
-----------
254. நரவாகனன் கலைபயிலல்
-
நால்வருந் துணைவ ராகி நறுநெய்பா லுடன ருந்தி
பான்மரத் தொட்டி லிட்டுப் பரவியுந் தவழ்ந்து மூன்றாம்
மால்பிறை போல்வ ளர்ந்து வரிசையி னிளமை நீங்கிப்
பான்மொழி வாணி தன்னைப் பாங்கினிற் சேர்த்தா ரன்றே.
--------------
255. நரவாகனன் உலாப்போதல்
-
ஞானநற் குமரி தன்னை நலமுழு துண்டு மாரன்
மானவிற் கணைக்கி லக்கா மன்மத னென்னக் கண்டோர்
வானவக் குமரர் போல வாரண மேறித் தோழர்
சேனைமுன் பின்னுஞ் செல்லச் சீர்நகர் வீதி சென்றான்.
-----------
256. நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்
-
ஒளிர்குழற் கலிங்க சேனை யுதர்த்தி னுற்ப வித்த
வளிநறும் பூஞ்சு கந்த மதனமஞ் சிகைதன் மேனி
குளிரிளந் தென்றல் வீசக் கோலமுற் றத்துப் பந்தைக்
களிகயற் கண்ணி யாடக் காவல குமரன் கண்டான்.
----
257. நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்
-
மட்டவிழ் கோதை தன்னை மன்னவ குமரன் கண்டு
இட்டநன் மார னம்பா லிருவரு மயக்க முற்று
மட்டவிழ் மலர்ச்சோ லைக்குள் மன்னவ குமரன் மின்னின்
இட்டிடை மாதைத் தந்தே யின்புறப் புணர்ந்தா னன்றே.
--------------
258. மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்
-
இருவரும் போகந் துய்த்தே யிளைத்துயில் கொள்ளும் போழ்து
மருவிய விச்சை மன்னன் மானச வேக னென்பான்
திருநிற மாதைக் கண்டு திறத்தினிற் கொண்டு சென்று
பெருவரை வெள்ளி மீதிற் பீடுறு புரம்புக் கானே.
-------
259. மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்
-
தன்னுடை நோயு ரைக்கத் தையலு மோனங் கொண்டே
இன்னுயிர்க் கணவன் றன்னை இனிமையி னினைத்தி ருப்ப
மின்னிடைத் தங்கை யான வேகநல் வதியை யேவி
மன்னிய நிறை யழிக்க வாஞ்சையின் விடுத்தா னன்றே.
-------------
260. வேகவதி நரவாகனன் சிறப்பினைக்கேட்டு அவனைக் காமுறல்
-
அன்புற வவளுஞ் சொல்ல வசலித மனத்த ளாகி
இன்புறுந் தன்னோர் நாத னிந்திரன் போலு மென்னப்
பண்புணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்த ளாகி
நண்பொடு விசும்பின் வந்து நரவாக னனைக்கண் டாளே.
----------
261. வேகவதி மதனமஞ்சிகை வடிவத்தோடு நரவாகனனைக் காண்டல்
-
கண்டபின் காமங் கூர்ந்து கார்விசும் பதனி னிற்பப்
புண்டவழ் வேலிற் காளை பூங்குழ லாட்கி ரங்கி
வண்டலர் சோலை மாடம் வனமெங்குந் தேடு கின்றான்
தொண்டைவா யுடைய வேக வதியுஞ்சூ தினிலே வந்தாள்.
--------------
262. மதனமஞ்சிகையென்று கருதி மன்னன் அவளைக் கூடுதல்br> கலிவிருத்தம்
-
மதன மஞ்சிகை மான்விழி ரூபம்போல்
வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள்
இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன்
புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள்.
--------
263. இதுவுமது
-
தாது திர்ந்து தரணியிற் பம்பிட
மாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல்
பேதை யைக்கண்டு பீடுடைக் காளையும்
தீதறுந் திறந் தேர்ந்து புணர்ந்தனன்.
----------
264. மன்னவன் வேகவதியை ஐயுற்று வினவுதல்
-
ஆங்கொர் நாளி லரிவை துயிலிடைத்
தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன்
பூங்கு ழா அல் நீ புதியைமற் றியாரெனப்
பாங்கில் வந்து பலவுரை செய்தனள்.
-------------
265. நரவாகனன் வேகவதியை விரும்புதல்
-
கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரை
வேட்ட வேடம் விரும்பிநீ காட்டெனக்
காட்டவே கண்டு காளை கலந்தனன்
ஊட்ட வேகணை யுன்னத மாரனே.
------
266. மானசவேகன் நரவாகனனையும் வேகவதியையும் பற்றிப்போதல்
-
மன்னு விஞ்சையின் மானச வேகனும்
துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன்
உன்னி வந்தவள் போன தறிந்துரை
பன்னி வந்திரு வோரையும் பற்றினன்.
-----------
267. மாவசவேகன் நரவாகனனை நிலத்திற் றள்ளிவீடுதல்
-
வான கஞ்சென்று வள்ளலை விட்டபின்
ஈனகஞ் செல வேலக் குழலியும்
தான கம்விஞ்சை தானுடன் விட்டனள்
கான கத்திடைக் காளையும் வீழ்ந்தான்.
------------
268. நரவாகனனைச் சதானிக முனிவன் காண்டல்
-
வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக்
கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம்
எதிர்வ ரும்பிறப் பெறிகின்ற மாமுனி
கதிரி லங்குவேற் காளையைக் கண்டனன்.
------------
269. இதுவுமது
-
போதி தன்வலிப் போத வுணர்ந்துதன்
காத லிற்சென்று காளைதன் னாமமும்
ஏத் மில்தந்தை யெய்திய நாமமும்
போதச் செப்பலும் போந்து பணிந்தனன்.
--------------
270. நரவாகனன் சதானிக முனிவனை வினவுதல்
-
தந்தை யென்முதல் தாமறிந் திங்குரை
அந்த மில்குணத் தையநீ ராரென
முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச்
சிந்தை கூர்ந்து சிறந்தொன்று கேட்டனன்.
-------------
271. இதுவுமது
-
விஞ்சை யம்பதி வெற்றிகொண் டாளுமென்
றஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டு
எஞ்ச லின்னிலை மையது வென்றென
விஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான்.
------------
272. முனிவன் கூறுதல்
-
வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம்
உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத்
தெள்லில் செல்வமு மீண்டுனக் காமென்றான்
கள்ளவிழ் கண்ணிக் காளையுங் கேட்டபின்.
-----------
273. நரவாகனன் இருமுதுகுரவர்க்கும் முனிவன் கூற்றை அறிவித்தல்
-
மாத வன்விட வள்ள னகர்புக்குத்
தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின்
தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும்
ஆத ரித்தவர்க் கன்னோன் விளம்பினன்.
------------
274. இதுவுமது
-
மேனி கழ்வென மெய்த்தவர் கூறின
தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன்
வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசை
ஈன மில்கும ரன்னினி தேறினான்.
-----------
275. நரவாகனன் வித்தியாதரருலகஞ் செல்லுதல்
-
அன்பால் வான்வழி யாய்மணித் தேர்செலத்
தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில்
இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகென
மின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன்.
--------------
276. நரவாகனனை அப்பொய்கைக் கரையில் ஒரு வித்தியாதரன் காண்டல்
-
நெடுங்க ரைமிசை நீர்மையி னின்றனன்
நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியே
கடிக மழ்கண்ணிக் காளை யிருந்தனன்
அடிகண் டோர்மக னன்பிற் றொழுதனன்.
------------
277. நரவாகனன் வித்தியாதரனை வினவுதலும், அவன் விடையும்
-
அண்ணல் கண்டுநீ யாருரை யென்றலும்
தண்ணென் வாய்மொழித் தானவன் சொல்லுவான்
அண்ணல் கேட்க வரிய வரைமிசைக்
கண்ணோ ளிர்கொடிக் கந்தரு வப்புரம்.
“மாண்புடையோய்! கேட்டருளுக! பிறர் எய்துதற்கரிய இந்த வெள்ளிமலைமிசை கண்ணுக்கு அழகாக விளங்குகின்ற கொடிகளையுடைய கந்தருவபுரம் என்னும் நகரமொன்றுளது” என்றான் என்க. (36)
------------
278. இதுவுமது
-
காவ லன்னீல வேகற்குக் காரிகை
நாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும்
பூவி ளங்கொடி புத்திரி நாகமும்
மேவி ளங்கு மநங்கவி லாசனை.
-------------
279. இதுவுமது
-
சுரும்பார் மாலை யமளித் துயிலிடைக்
கரும்பார் நன்மொழி காதற் கனவிடை
விரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான்
பரம்பு மண்ணின்று பாங்கி னெழுந்ததே.
----------------
280. இதுவுமது
-
வரைமி சைவந்து மன்னிய தன்முலை
அரிய முத்தணி யாரத்தைக் கவ்வியே
விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்
அரிவை கண்டுத னனையர்க்கு ரைத்தனள்.
-------------
281. இதுவுமது
-
வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன்
சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனி
புல்ல ரும்பதம் பொற்பி னிறைஞ்சினன்
நல்ல ருந்தவ னற்கனாக் கேட்டனன்.
-------------
282. இதுவுமது
-
அறிந்த ருள்செய் தனனம் முனிவனும்
செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும்
அறைந்த நின்மகட் காகு மணவரன்
நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன்.
-------------
283. இதுவுமது
-
அம்மு னிவன்சொ லரசன் கேட்டுடன்
தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச்
செம்மை யெண்ணியே செப்பி விட்டனன்
உம்மைக் கண்டனன் செல்க வென்றனன்.
------------
284. நரவாகனனை நீலவேகன் எதிர்கொள்ளல்
-
போவ தேபொருள் புண்ணி யற்கொண்டு
தேவ னேயெனச் செல்வ னுஞ்செலும்
காவலன் னெதிர் கண்டு கண்மகிழ்
ஏவ லாளரோ டினிதி னெய்தினான்.
----------------
-
285. நீலவேகன் நரவாகனனுக்கு முகமன் மொழிதல்
கன்னல் விற்கணை யில்லாக் காமனை
இன்னி லக்கண மேற்ற காளையை
மன்ன னின்னுரை மகிழ்ந்து கூறினான்
பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன்.
---------------
286. அநங்கவிலாசனை சுயம் வரம்
-
தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால்
சினத்தொ டுமன்னர் சேர்வ ராலென
மனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரை
இனத்தொர் மாவர மியம்பி விட்டனர்.
------------
287. அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலை சூட்டுதல்
-
மன்ன ரீண்டியே வந்தி ருக்கையில்
அன்ன மென்னடை யமிர்த மன்னவள்
மின்னின் மாலையை விரகி னேந்திமுன்
சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள்.
------------
288. மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்
-
அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின்
திரும ணஞ்செய்து செல்வ னின்புற
இருவ ரும்புணர்ந் தின்ப மார்ந்தனர்
வெருவு மானச வேகன் றன்மனம்.
குறிப்பு:--இவ்விடத்தில் மானசவேகன் நரவாகனனுக்கு அஞ்சி மதன மஞ்சிகையைக் கொணர்ந்து நரவாகனன் பால் விட்டுப் போயினன் என்னும் பொருளுடைய செய்யுள் ஒன்று விடுபட்டிருத்தல் வேண்டு மென்று தோன்றுகின்றது.
-------------
289. நரவாகனன் திருவுலா
-
வேக யானைமே லேறி வீரனும்
நாக நீள்புர நடுவிற் றோன்றலும்
காம னேயெனக் கன்னி மங்கையர்
தாம ரைக்கணாற் றான்ப ருகுநாள்.
-------------
290. நரவாகனன் எய்திய பேறுகள்
-
நேமி யாளவே நினைத்த தோன்றலும்
வாம நாகர்தம் மலையிற் சென்றனன்
தாம மார்பனைத் தரத்திற் கண்டவர்
நேமி தான்முத னிதிக ளொன்பதும்.
-------------
291. இதுவுமது
-
நாம விந்திர னன்க ருள்செயக்
காம னுக்கீந்து கண்டு சேவித்துத்
தாம வந்தரர் தாம்ப ணிந்திடத்
தோமி னாலிரண் டொன்ற வாயிரம்.
இந்திரன் நரவாகனனை யுவந்து சக்கரநிதி முதலிய ஒன்பது வகை நிதிகளையும் எண்ணாயிரம் மகளிரையும் வழங்க, அவற்றைத் தேவர்கள் கொணர்ந்து நரவாகனனுக்கு வழங்கி வணங்கினர் என்றவாறு, தோம் - குற்றம், எண்ணாயிரம்: மகளிர்க்கு ஆகுபெயர் மேல்-294 ஆம் செய்யுளில் ‘எண்ணாயிரமான தேவியர்’ எனவருவதூஉ முணர்க. (50)
----------
292. நரவாகனனைச் சக்கரப் படை வந்து வணங்கல்
-
சக்க ரம்வலம் சார்ந்தி றைஞ்சின
மிக்க புண்ணியன் மீட்டு வந்துடன்
தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம்
அக்க ணத்தினி லடிப்ப டுத்தினன்.
-----------
293. நரவாகனன் வாகைசூடி வருதல்
-
விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன்
தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியே
எஞ்ச லில்புர மிந்தி ரன்னென
மிஞ்ச மாளிகை வீரன் சென்றனன்.
-----------
294. நரவாகனன் அரசு வீற்றிருத்தல்
-
மதன மஞ்சிகை மனங்கு ளிர்ந்திட
விதன மின்றிநல் வேக வதியுடன்
அதிக போக வநங்க விலாசனை
அதிக வெண்ணா யிரமான தேவியர்.
-----------
295. இதுவுமது
-
இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின்
இனிய புண்ணிய மீண்டி மேல்வரத்
தனிய ரசினைத் தானி யற்றியே
நனிய தொன்றினன் னாம வேலினான்.
------------
296. நரவாகனன் தந்தையைக் காணவருதல்
-
விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர்
பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன்
மஞ்சு சூழ்மலை விட்டு வானவர்
தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான்.
-------------
297. இதுவுமது
-
புரம திக்கப்பூ மாலை தோரணம்
வரம்பி னாற்றியே வான்கொ டிம்மிடை
அரும்பு மாலைவே லரசன் சென்றெதிர்
விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன்.
------------
298. நரவாகனன் தந்தைதாயரை வணங்கல்
-
298. தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின்
இந்து வாணுத லெழின்ம டந்தையர்
வந்து மாமனை வணங்கி மாமியை
அந்த மில்வனத் தடியி றைஞ்சினார்.
----------
299. உதயணன் செயல்
-
மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின்
நெகிழ்ந்த காதலா னேமிச் செல்வனும்
மிகுந்த சீருடன் வீற்றி ருந்தனன்
மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன்.
----------
300. பதுமாபதியின் மைந்தனாகிய கோமுகனுக்கு முடிசூட்டல்
-
பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம்
கொதிநு னைவேலின் கோமு கன்றனை
இதம ளித்திடு மிளவ ரைசென
அதுல நேமிய னரசு நாட்டினான்.
-----------
301. நரவாகனன் வித்தியாதர ருலகம் போதல்
-
தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற்
றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி
வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும்
இந்தி ரன்றனூ ரியல்பி னேகினன்.
------------
302. நரவாகனன் வித்தியாதர ருலகம் புகுதல்
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
-
செலவநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டு
செல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்து
செல்வவிந் திரன னுப்பத் திருமணித் தேரி னேறிச்
செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தா னன்றே.
ஐந்தாவது நரவாகன காண்டம் முற்றும்.
------------
ஆறாவது - துறவுக் காண்டம்
303. உதயணகுமரன் தவம்புரியக் கருதுதல்
-
வளங்கெழு வத்த வற்கு மன்னிய காதன் மிக்க
உளங்கெழு கற்பி னார்க ளோதிமம் போலு நீரார்
இளங்கிளி மொழியி னார்க ளினிமையி னால்வ ரோடும்
துளங்கலி றிருமின் போர்மின் தூயசொன் மடந்தை தாமும்.
----------
304. இதுவுமது
-
மண்ணியன் மடந்தை யோடு மருவினார் மிக்க மன்னன்
புண்ணிய முன்னாட் செய்த போதந்தே யுதவி செய்ய
எண்ணிய கரும மெல்லா மியைபுட னாகப் பின்னும்
புண்ணிய நோன்பு நோற்கப் பொருந்திய மனத்த னானான்.
------------
305. உதயணன் தவத்தின் பெருமையை நினைத்தல்
கலிவிருத்தம்
-
ஆசை யென்றனக் கருளுந் தோழனா
ஓசை வண்புகழ் யூகி யானதும்
வாச வதத்தை மனைவி யானதும்
பேச ரும்மகப் பெற்றெ டுத்ததும்.
--------
306. இதுவுமது
-
நரவாக னன்மக னாம மானதும்
வரைமிசைத் தானவர் வாழு நாட்டையங்
கரண நேமியா லடிப்ப டுத்ததும்
பொருவில் வேந்தர்கள் புகழ்ந்த டைந்ததும்.
------------
307. இதுவுமது
-
மிக்க விந்திரன் மேவி விட்டதும்
தக்க புத்திரன் றரத்திற் சென்றதும்
தொக்க வானவர் தொல்சி றப்புடன்
அக்க ணம்விட வண்ணல் போந்ததும்.
--------------
308. இதுவுமது
-
போந்து புண்ணியன் பொருவில் போகத்துச்
சேர்ந்தி ருந்ததுஞ் செய்த வத்தெனா
வேந்த னெண்ணியே வெறுத்து மாதரைக்
காந்தி வாமனைக் கண்ட டிதொழும்.
-----------
309. மகளிர் உதயணன் துறவுபூ ணாவகை மயக்குதல்
-
எண்ணம் வந்துநல் லெழிற்பெ ரும்மகன்
புண்ணி யநோன்பு போந்த வேளைவேற்
கண்ணின் மாதர்கள் காவ லன்மனம்
உண்ணக் காமத்தை யுருவு காட்டினார்.
---------
310. உதயணன் மீண்டும் காமவின்பத்தே யழுந்துதல்
-
மன்னு மன்பினீண் மாதர் மோகத்திற்
றுன்னு மால்கடற் றோன்ற னீந்துநாட்
சொன்ன மும்மதந் தோன்ற வேழமும்
உன்னிக் காற்றளை யுதறி விட்டதே.
-----------
311. மதவெறி கொண்ட களிற்றியானையின் செயல்
-
காய்ந்து வெம்மையிற் காலன் போலவே
பாய்ந்து பாகரைப் பலச னங்களைத்
தேய்ந்து காலினேர் தீயு மிழ்வபோல்
ஆய்ந்த கண்களு மருவ ரையென.
-----------
312. இதுவுமது
-
வெடிப டும்முழக் கிடியே னவிடும்
கொடியு டைமதில் கிடுகி டென்றிடும்
விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப்
படப டென்னவே பயண மானதே.
----
313. நகரமாந்தர் செயல்
-
அடிய டிய்யென வாயு தர்செலப்
படுப டுவ் வெனப் பறைகள் கொட்டிட
திடுதி டென்றோலி தெறித்த பேரிகை
நடுந டுங்கினார் நகர மாந்தரே.
-------------
314. களிற்றின் செயல்
-
பிடிசில் பாகரைப் பிளந்தே றிந்திடக்
குடரின் மாலைகள் கோட்ட ணிந்துடன்
கடவுள் யானையைக் காலிற் றேய்த்திட
இடர்ப டுங்களி றெய்தி யோடுமே.
-------------
315. நகரமாந்தர் அரசனுக்கறிவித்தல்
-
நகர மாந்தர்க ணடுங்கிச் சென்றுநற்
சிகரம் போன்முடிச் சீர ரசற்குப்
பகர வாரணம் பலரைக் கொன்றதென்
சிகர மாடநீர் சேர்ந்தி ருக்கென்றான்.
-------------
316. நகரமாந்தர் செயல்
-
அடிய டிய்யென வாயு தர்செலப்
படுப டுவ் வெனப் பறைகள் கொட்டிட
திடுதி டென்றோலி தெறித்த பேரிகை
நடுந டுங்கினார் நகர மாந்தரே.
-----------
317.
-
வழிவ ருவாரை மார்கி ழித்திடும்
எழில்வனம்பொய்கையீட ழித்திடும்
இழிவு றுந்தொழி லீண்டிச் செய்யுநாட்
பொழிலுண் மாதவர் பொருந்தினார்களே.
318. சாரணர் சார்ந்திருந்த பொழில்
-
வேத நான்கையும் விரித்த ருளுவர்
மாத வர்வினை மாயச் செய்குவார்
ஏதில யாத்திரைக் கெழுந்து வந்தந்தப்
போத விழ்பொழில் புகுந்தி ருந்தனர்.
-------------
319. அச்சாரணர் மாண்பு
-
இனம லர்மிசை யேகு வார்களும்
புனல லைமிசைப் போகு வார்களும்
கனிகள் காய்மிசை காணுஞ் சாரணர்
இனிய நூன்மிசை இசைந்து செல்வரும்.
------------
320. இதுவுமது
மலைத்த லைமிசை வானிற் செல்வரும்
நிலத்தி னால்விர னீங்கிச் செல்வரும்
தலத்தி னன்முழந் தரத்திற் செல்வரும்
பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும்.
(இ - ள்.) இலையுச்சியின்மேலே வானத்தே செல்வதனாலே ‘ஆகாயசாரணர்’் எனப்படுவோரும், நிலத்தினின்றும் நால்விரன் மேலே செல்வதனால் ‘சதுரங்குல சாரணர்’் எனப்படுவோரும், நிலத்தினின்றும் நன்மையுடைய ஒரு முழம் உயரத்தே செல்வதனால் ‘தலசாரணர்’் எனப்படுவோரும், மலைமுழைஞ்சுகளிலே கூடியிருந்து வானத்தே செல்வதனால் ‘சங்கசாரணர’் எனப்படுவோரும் என்க. (18)
-------------
321. இதுவுமது
மலைமு ழைஞ்சுண் மன்னி னான்மறை
உலகெ லாமவ ரொருங்கி டவிடும்
அலம தீரவே வறம ழைபெய்யும்
மலம றுந்தர மாமு னிவரும்.
(இ - ள்.) மலைமுழைஞ்சுகளிலே நிலைபெற்று நைவாரேனும் நான்கு மறைப்பொருளையும் உலகெலாம் வாழும் மாந்தர் மனம் ஒருங்கிக் கேட்குமாறும் அவர்க்கு ஊழ்வினை கூட்டுகின்ற துன்பங்களை அறுக்க அறமாகிய மழை பெய்கின்ற முகில்போல் வாடும் துன்பற்ற மெய்யுணர்வுடைய தகுதியையுடைய முனிவர்களும் என்க.(19)
----------
322. இதுவுமது
பக்க நோன்புடைப் பரம மாமுனி
மிக்க பாணிமீ தடிசின் மேதினி
புக்கு முண்டிடப் போது வார்பகல்
தக்க வர்குணம் சாற்ற ரிதென்றே.
(இ - ள்.) பல பகுதிகளையுடைய நோன்பை மேற்கொண்ட மேலான முனிவராகிய இவர்கள் மிகவும் தமது கைகளிலேயே உலகின்கண் இல்லறத்தாரிடம் சென்று பிச்சைபுக் குண்ணற்பொருட்டு ஒரொருகாற் பகற்பொழுதிலே போவர், தகுதியுடைய இவர்தம் மாண்பினைக் கூறிக் காட்டல் அரிதாம் என்க. (20)
-----------
323. தருமவீரர் அறங் கூறல்
தரும வீரரென் றவருட் டலைவன்பால்
வெருவருந் துன்ப விலங்கும் வாழ்க்கையை
மருவி யோதவே வந்த யாவரும்
திருமொ ழியினைத் திறத்திற் கேட்டனர்.
(இ - ள்.) அச்சாரணர் குழுவினுட் டலைவராகிய தருமவீரர் என்பவர் அஞ்சத்தகுந்த பிறவித் துயரந் தீர்தற்குரிய மெய்யாய வாழ்க்கையை எடுத்து ஓதாநிற்ப அத்தலைவன்பால் ஆங்குவந்தவர் எய்தி அவர் கூறுகின்ற அழகிய அறமொழிகளைக் கேட்பாராயினர் என்க. வந்த யாவரும் தலைவன்பால் மருவிக் கேட்டனர் என்று கூட்டுக. (21)
------------
324. யானையின் செயல்
வருந்த சைநசை வானிற் புள்ளுகள்
இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப்
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும்
விருந்த வையுண விட்ட தியானையே.
(இ - ள்.) ஊனுண்ணும் விருப்பத்தோடு வானிற் பறந்து வரும் பறவைகள் ஆரவாரித்து மேலும் கீழுமாய்த் தன்னைச் சூழ்ந்து வாராநிற்பவும் பருந்துகள் முன்னும் பின்னும் பரவிப் பறந்து வரவும் அவையெல்லாம் விருந்துண்டு மகிழும்படியும் அக்களிற்றியானை உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊன்களை வழங்கியது என்க. (22)
---------
325. அந்த யானை சாரணர் அறவுரை கேட்டுத் தன் பழம் பிறப்பினை யுணர்தல்
கூற்றெ ழுங்கரி கொதித்தே ழுந்ததால்
ஆற்ற லம்முனி யறவு ரையுற
ஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடை
மாற்ற ரும்பவ மறித்து ணர்ந்ததே.
(இ - ள்.) மறவிபோன்றெழுந்து உயிரினங்களை அழிக்கும் அக்களிற்றியானை அவ்வறங்கேட்கும் குழுவினரைக் கண்டு மேலும் சினந்து அக் கூட்டத்தை நோக்கி வந்துழி அங்குத் தவவாற்றல்மிக்க அத் தருமவீரர் திருமாய்மலர்ந்தருளிய அறவுரை ஆகூழுண்மையின் அக்களிற்றியானையின் செவியிற் புகுதலாலே அதனை ஏற்று அம் முனிவனை வணங்கி மாற்றுதற் கரிய தனது பிறப்பின் வரலாற்றினை மீண்டும் உணர்வதாயிற்று என்க. (23)
-------------
326. களிறு தன் செயலுக்கு வருந்துதல்
குருதியாறிடக் கொன்ற தீவினை
வெருவு துக்கமும் விலங்கி னுய்த்திடும்
அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும்
பெருந்து யரெனப் பேது றுக்குமே.
(இ - ள்.) ஊழ்வினை காரணமாகத் தருமவீரருடைய அறவுரைகளைச் செவியேற்ற அக்களிறு தமது அறியாமையாலே குருதி ஆறாகப் பெருகி ஓடும்படி தான் உயிரினங்களைக் கொன்றமையாலே தனக்கெய்திய தீவினையானது அஞ்சத்தகுந்த துன்பத்தையும் மேலும் விலங்குப பிறப்பினையும் கொடுக்குமே என்றும், பெருந்துயருக்குக் காரணமான அரிய நரகத்தினும் அழுத்திவிடுமே என்றும் எண்ணிப் பெரிதும் வருந்தியது என்க. (24)
-------------
327. களிற்றியானை மெய்யுணர்வெய்தி அமைதியுறுதல்
327. நெஞ்சு நொந்தழு நெடுங்க ணீருகும்
அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக்
குஞ்ச ரம்மினிக் கோன கருன்னி
இஞ்சி வாய்தலி னெய்தி நின்றதே.
(இ - ள்.) இவ்வாறு தன் பிறப்புணர்ந்த அக் களிற்றியானை தான் செய்த தீவினையை எண்ணி உளம் நொந்து கண்ணீர் சொரிந்து தன்னுள் அழுது அஞ்சாநிற்கும;் இங்ஙனம் அக் களிற்றியானைக்கு அப்பொழுது நன்ஞானம் தோன்றுதலாலே தன் மன்னனாகிய உதயணகுமரனுடைய அரண்மனையை நினைத்து மீண்டு சென்று அவ்வரண்மனை மதில் மாடவாயிலிலே அமைதியாக நின்றது என்க. (25)
------------
328. உதயணகுமரன் அக்களிற்றைக் காண வருதல்
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
-
கடையுடைக் காவ லாளர் கதவினைத் திறக்கப் போந்தே
நடுநகர் வீதி சென்று நரபதி மனையைச் சார்ந்து
நெடுவரை போல நின்ற நீர்மையை வாயி லாளர்
முடிமனற் குரைப்ப முன்னிப் பெருமக னெழுந்து வந்தான்.
------
329. யூகி உதயணனை அக்களிற்றின் மிசை ஏறுக வென்னல்
-
திருமுடி மன்ன னின்ற திருநிறை யானை கண்டு
மருவிய வமைச்சர் தம்மை மன்னவ னினிதி னோக்கப்
பெருவிரல் யூகி சொல்வான் பெருந்தவர் பால றத்தை
மருவியே கேட்ட தாகும் மன்னநீ யேற வென்றான்.
-----------
330. களிற்றியானை உதயணனை முனிவர்பாற் கொண்டு போதல்
-
வேந்தனுங் கேட்டு வந்து வெண்கோட்டி னடிவைத் தேறிச்
சேந்தன னெருத்தின் மீதிற் றிரும்பிக்கொண் டேகி வேழம்
பூந்தளிர் நிறைந்தி லங்கும் பொழில்வலஞ் சுற்ற வந்து
காந்துநன் மணிப்பூண் மார்பன் கைம்மாவிட் டிழிந்தா னன்றே.
----------------
331. உதயணகுமரன் அத்துறவோர்பால் அறங்கேட்டல்
-
விரைகமழ் பூவு நீரும் வேண்டிய பலமு மேந்திப்
பரிசனஞ் சூழத் சென்று பார்த்திப னினிய னாகி
மருமலர் கொண்டு வாழ்த்தி மாதவ ரடியி றைஞ்ச
இருவென விருக்கை காட்ட விருந்துநல் லறத்தைக் கேட்டான்.
------------
332. முனிவர் கூறும் அறவுரைகள்
-
அறத்திற முனிவன் சொல்ல வரசனுங் கேட்க லுற்றான்
பெறற்கரு மருங்க லங்கள் பேணுதற் கரிய வாகும்
திறத்தறி பொருள்க ளாறுந் தேர்ந்துபஞ் சாத்தி காயம்
மறித்தறி தத்து வங்கள் வரிசையி னேழ தாமே.
------------
333. இதுவுமது
-
சீரிய நவப தங்கள் செப்பிய காய மாறும்
வீரியப் பொறிக ளாறும் வேண்டிய வடக்க மாகும்
ஓரிய லறம்பத் தோடு மொருங்குபன் னிரண்டு சிந்தை
ஆரிய ரறிந்து நம்பி யதன்வழி யொழுக்க மாகும்.
-----------
334. இதுவுமது
-
தலைமகார் சிறப்புச் செய்து தன்மைநல் வாய்மை யான
கலையினற் கரையைக் கண்டு காதனூல் வழியைச் சென்று
மலைவில்சீர் மாத வர்க்கு வண்மையிற் றானஞ் செய்தார்
தொலைவிலாப் பிறவி நீங்கித் தொல்சுகக் கடலு ளாழ்வார்.
-----------
335. இதுவுமது
கலிவிருத்தம்
-
தரும வீரர் தரும முரைத்திடப்
பெருமை மன்னனும் பேர்ந்து வணங்கினன்
மருவு வல்வினை மாசி னுதிர்த்திட
தெரிச னவ்விளக் கஞ்சிறப் பானதே.
-----
336. உதயணன் அம்முனிவன்பால் களிற்றின் வரலாறு வினவுதலும் முனிவன் கூறலும்
-
காது வேன்மன்னன் களிறு கதமெழற்
கேது வென்னென யெதிவ ரன்சொலும்
தாது பூம்பொழிற் சாலிநன் னாட்டிடை
வேதி யர்குழு வாய்விளங் கும்புரம்.
-----------
337. இதுவுமது
-
கடக மென்பதூர் காதற் பிராமணன்
விடப கன்னெனும் பேரினன் மற்றவன்
இடைமின் றேவியுஞ் சானகி யென்பவள்
கடையில் காமங் கலந்துடன் செல்லுநாள்.
----------------
338. இதுவுமது
-
அமரி யென்னு மணிமுலை வேசிதன்
அமையுங் காமத் தழுங்கி விழுந்தவன்
சமைய வேள்வியுஞ் சார்ந்த வொழுக்கமும்
அமைவி லன்பவ மஞ்சின னில்லையே.
-----
339. இதுவுமது
-
காமங் கள்ளுண்டு கைவிட லின்றியே
தாம நற்குழ லாடுணை யாகவும்
யாம மும்பக லும்மறி யாதவன்
ஆமர ணத்தின்பி னானைய தாயினன்.
--------------
340. முனிவர் உரைகேட்ட முடிமன்னன் செயல்
-
அந்நிலை யுணர்ந் தடங்கியதென்றனர்
மன்னன் கேட்டுடன் வந்துநற் பாகர்க்குச்
சொன்ன யானையைத் தூயநீ ராட்டெனும்
அன்னம் பானெய்யி னன்புட னூட்டெனும்.
------------------
341. இதுவுமது
-
கவள நாடொறு மூட்டெனுங் காவலன்
பவள மாமெனும் பண்ணவர் தம்மடி
திவளு மாமுடி சேர்த்து வணங்கியே
உவள கத்துன்னி மற்றொன்று கேட்டனன்.
-----------
342. உதயணன் முனிவரை மற்றொன்று வினவுதல்
-
மதக்க ளிற்றின்மேன் மன்னிய வன்பெனக்
குதவக் காரண மென்னெனக் கூறலும்
சிதைவில் காட்சிநற் சீரொழுக் கத்தவர்
மதமின் மாட்சியர் மன்னநீ கேளென்றார்.
-------------
343. முனிவர் கூற்று
-
உள்ள நற்றவ ருற்றுரை செய்கின்றார்
கள்ள விழ்பொழிற் கார்முகில் சூடியே
வெள்ளி யம்மலை மேல்வட சேடியில்
வள்ளலார் பொய்கை மத்திம நாட்டினுள்.
---------------
344. இதுவுமது
-
சுகந்தி யூர்க்கிறை சொற்புகழ் மாதவன்
அகந்தெ ளிந்த வயந்தன் மனைவியாம்
செகந் தனிப்புகழ் சீரார்கு லாங்கனை
உகந்து பெற்றன ளோர்புகழ்க் கோமுகன்.
345. இதுவுமது
-
காம னெனனுமக் காளைகைத் தாய்பெயர்
சோம சுந்தரி யென்னுஞ் சுரிகுழல்
நாம வேன்மக னன்மை விசையனும்
சேம மித்திர ராகச் சிறந்தனர்.
------------
346. இதுவுமது
-
ஒழியாக் காத லுடன்விளை யாடியே
வழுவில் போகம் வரம்பின்றித் துய்த்தலும்
நழுவில் காட்சிய னாமவேற் கோமுகன்
ஒழிய நல்லுயிர் ஓங்கிநீ யாயினை.
-----------
347. இதுவுமது
-
விசையன் றன்னுயிர் விட்டந் தணனாய்
வசையில் காம மயங்கிய மோகத்தின்
இசையி னாலுயிர் நீங்கியே யிங்குவந்
தசையு ணாக்களி றாயின தாகுமே.
------------
348. இதுவுமது
-
மித்தி ரன்முன்பு வீறுநற காதலால்
அத்தி மேலுனக் கன்புமுண் டானதால்
வெற்றி வெண்குடை வேந்தேயிவ் வேழத்தின்
ஒத்த வாயுவு மேரெழு நாளென்றார்.
----------
349. உதயணன் வருந்திக் கூறுதல்
-
திருந்து ஞானத்திற் றேர்ந்த முனியுரை
பொருந்தக் கேட்ட புரவலன் றுக்கமாய்
வருந்திச் சென்றந்த வாரணந் தன்னிடைச்
சரிந்த காதலிற் றானுரை செய்கின்றான்.
--------------
350.உதயணன் செயல்
-
வஞ்ச கத்தின் வரிந்துங் கயிற்றினால்
வெஞ்செம் முள்ளினை வீறிட வூன்றியும்
மிஞ்சிக் கால்விலங் கிற்சிறை செய்தனன்
குஞ்ச ரம்பொறை கொள்ளுதி யென்னவே.
-----
351. இதுவுமது
-
காதல் யானையைக் கையின்மெய் தீண்டியே
போத வெங்கும் புரவலன் றைவரப்
போத கம்மிகப் பொற்பி னிறைஞ்சலிற்
காத லிற்றிண் களிற்றியல் கூறெனா.
----------
352. உதயணன் அரண்மனை புகுதல்
-
யானை யாளர்க் குரைத்தெழின் மன்னவன்
தேனெய் தோய்ந்த திருமொழி மாதவர்
ஆன வர்பத மன்பிற் றொழுதுபோய்ச்
சேனை சூழத் திருமனை சேர்ந்தனன்.
---------------
353. உதயணகுமரன் இறைவழிபாடு செய்தல்
ஆசிரிய விருத்தம்
-
சீலமும்வ ளங்களுஞ் செறிந்தவேழத் தன்மையை
காலையவ்வு ழையர்வந்து கண்டுரைப்ப மன்னனும்
ஆலையம் வலமதா யருகனைவ ணங்கிப்பின்
பாலடிசி னெய்யருந்திப் பாரரசன் செல்லுநாள்.
-----------
354. உதயணன் செயல்
-
சல்லகீணை கொண்டுடன் சமாதிவந்தே யெய்தலும்
நல்லவானிற் றேவனாய் நாகமுறை செய்யக்கேட்டுச்
சொல்லரிய வேந்தனுஞ் சூழ்ந்தவனி போகமும்
நில்லலவென் றுணர்ந்தன னேமியனைவா வென்றனன்.
-------------
355. நரவாகனன் வருதலும் உதயணன் அவனுக்குக் கூறலும்
-
அவனும்வந்து தந்தையை யடியிணைவ ணங்கினான்
அவனியுன தாகவா ளென்னமன்னன் செப்பினன்
தவனிதை யாளநான் றாங்குதற்குப் போவனே
உவமமிலா ராச்சிய முற்றதெதற் கென்றனன்.
-----------
356. கோமகனுக்கு முடி சூட்டுதல்
-
வத்தவன் னிறைவனாக மன்னுகோ முகனுக்கு
வெற்றிநன்ம ணிமுடியை வீறுடனே சூட்டியே
ஒத்துலக மாள்கவென் றுரைபல வுரைத்தபின்
சித்திரநேர் மாதரைச் செல்வனோக்கிக் கூறுவான்.
--------------
357. உதயணன் மனைவிமார்க்குக் கூறுதலும், அவர் கூறுதலும்
-
தேவியீர்நீர் வேண்டியதென் திருமனை துறந்துபின்
மேவுவனற் றவமென்ன மின்னிடைய மாதரும்
போவதுபொ ருளெமக்கும் புரவலனே நின்னுடன்
தாவில்சீர் விழுத்தவமுந் தாங்குதுமென் றிட்டனர்.
-------------
358. தேவிமாரும் அமைச்சரும் அரசனுடன் செல்லுதல்
-
உருமண்ணு விடபகன் யூகிநல் வயந்தகன்
பொருவினா லமைச்சரும் பொற்பரசன் மாதரும்
மருவுநன் மலர்ப்பொழில் வண்மைவலங் கொண்டுமிக்
கருண் முனிவர் பாதத்தி லன்புடன் பணிந்தனர்.
-------------
359. உதயணன் முனிவரைத் தவந்தர வேண்டல்
-
நாத்தழும்ப மன்னனு நயமுறு மினிமையின்
தோத்திரங்கள் கொண்டுமீத் தொடுத்தொலியின் வாழ்த்தியே
ஏத்தற முரைத்தி்ட வினிமைவைத்துக் கேட்டனன்
ஏத்தரிய நற்றவமு மெங்களுக் களிக்கென்றான்.
------------
360. உதயணன் முதலியோர் தவக்கோலங் கோடல்
-
காலமிது காட்சிதலை கண்டுணர்த்தக் கைக்கொண்டு
ஞாலநிகழ் ஞானமு நன்குமிகவே யுணர்த்திச்
சீலமாதி யாயொழுக்கஞ் சீருட னளித்தபின்
கோலமான குஞ்சிமுதல் வாங்கித்தவங் கொண்டனர்.
-----------
361. உதயணன் முதலியோர் தவநிலை
-
அறுவகைய காயங்களை யருண்மிக்குற் றோம்பியும்
பொறிகளை மனத்தடக்கிப் புண்ணியமா நோன்புகள்
அறிகுறி யநசன மாற்றுதற் கரிதென
மறுவறு தியானமு மதியகந் தெளிந்தவே.
------------
362. இதுவுமது
-
புறத்தினும் மகத்தினும் போகத்தொடர்ப் பாடுவிட்
டறத்திடை யருளினா லாருயிரை யோம்பியும்
திறத்துடன் சமிதியும் சிந்தையி னடக்கமும்
திறத்திறத் துணர்ந்துபின் றியானமுற்றி னார்களே.
-----------
363. இதுவுமது
-
ஒருவகை யெழின்மன மிருவகைத் துறவுடன்
மருவுகுத்தி மூன்றுமே மாற்றிநான்கு சன்னையும்
பொருவிலைம் புலம்மடக்கிப் பொருந்தியவா வச்சமூ
விருவகைச் செவிலியு மெழுவரையும் வைத்தனர்.
----------
364. இதுவுமது
-
சுத்திமிக எட்டினோடுஞ் சூழ்ந்தயோகு ஒன்பதாம்
பத்துவகை யூற்றடைத்துப் பயின்றவங்கம் பத்தொன்றும்
சித்தம்பனி ரெண்டுசீர்க் கிரியைபதின் மூன்றுடன்
ஒத்தபங்க மீரேழும் ஒருங்குடன் பயின்றனர்.
--------------
365. உதயணன் கேவலஞான மெய்துதல்
-
உதயண முனிவனு மோங்குமா வரைதனில்
இதயமினி தாகவே யெழில்பெறநல் யோகமாய்
இதமுறு தியானத்தி னிருவினை யெரித்துடன்
பதமினிது சித்தியெய்திப்
பரமசுகத் தினிதிருந்தனன்
-----------
366. தேவிமாரும் அமைச்சரும் நோன்பு செய்து தேவராதல்
-
அமைச்சரா மநகரு மானவன்ன மாதரும்
சமைத்த நோன்பு நோற்றுயர்ந்து சமாதிநன் மரணத்தின்
இமைத்தலில் லமரரா நிறைந்தசோத மாதியாய்
அமைத்தவச் சுதம்மள வானபடி யின்புற்றார்.
-------------
367. தேவிமாரும் அமைச்சரும் தேவலோகத்தின் புற்றிருத்தல்
-
பொற்புடைநன் மாதரைப் புணர்ந்துமேனி தீண்டலும்
அற்புதமாய்க் காண்டலு மானவின்சொற் கேட்டலும்
கற்புடைம னத்திலெண்ணிக் காணற்கரி தாகவே
விற்பனநன் மாதவர் வேண்டுசுகந் துய்த்தனர்.
ஆகச் செய்யுள் 367
உதயணகுமார காவியமும் உரையும் முற்றும்
---------------
உதயணகுமாராவியம் : காண்டங்களின் & செய்யுட்டொகை
அறுசீர்கழிநெடிலடிாசிரிய விருத்தம்
உஞ்சைநற் காண்டந் தன்னி லுயர்கவி நூற்றீ ரெட்டு
மிஞ்சவே யிலாவா ணத்தின் வீறுயர் முப்ப தாகும்
எஞ்சலின் மகத காண்ட மெழிலுடை முப்பத் தஞ்சாம்
அஞ்சுட னைம்பத் தொன்றா மரியவத் தவத்திலன்றே
நறுமலர் மாலை மார்ப னரவாக காண்டந் தன்னில்
அறுபது மொன்றுமாகு மாகிய துறவுக் காண்டம்
அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந்
திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகு மன்றே
நூற்றீரெட்டு நூற்றுப்பதினாறு முதலில் உள்ள கடவுள் வாழ்த்து அவையடக்கம் பயன்கூறும் நான்கு செய்யுளையும் நீக்கி உஞ்சைக் காண்டச் செய்யுட் டொகை காண்க
--------------
This file was last updated on 12 Nov. 2017
.